‘தாய்நாட்டை நேசிக்கும் எந்தப் பிரஜையும் சுதந்திர தினத்தை ‘கரிநாள் என்று சொல்லமாட்டார்கள் ‘

Date:

இலங்கையில் பிறந்த எந்தக் குடிமகனும், தாய்நாட்டை நேசிக்கும் எந்தப் பிரஜையும் தேசிய சுதந்திர தினத்தை கரிநாள் என்றோ, கறுப்பு நாள் என்றோ சொல்லமாட்டார்கள் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்

இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினத்தை வடக்கு கிழக்கில் கரிநாள் எனப் பிரகடனப்படுத்தி பேரணிக்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவது தொடர்பில் கருத்துரைக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் “இந்த நாட்டில் எதிர்த் தரப்பினரின் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்குள் சிக்கி சிலர் தேசிய சுதந்திர தினத்தை கறுப்பு நாள் என்று சொல்வதும், கரிநாள் என்று கூறுவது துரதிர்ஷ்டவசமே.

அவ்வாறானவர்களின் விமர்சனங்களை ஒரு பக்கத்தில் தூக்கி வைத்துவிட்டு பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுக்க, நாட்டை நேசிக்கும் அனைத்து உறவுகளும் ஒன்றாகச் சங்கமிக்க வேண்டும்” என்று ரணில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

இஸ்ரேல் சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு

இஸ்ரேல் சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு...

அமைச்சர் விஜித ஹேரத் ஜேர்மனிக்கு விஜயம்

வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித்த ஹேரத் நாளை...

புதிய 3 நாடுகளின் தூதுவர்கள் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் கையளிப்பு

நாட்டிற்கு புதிதாக நியமிக்கப்பட்ட மூன்று தூதுவர்கள் நேற்று (24) முற்பகல் ஜனாதிபதி...

எவன்கார்ட் நிறுவனத்தின் மனுக்கள் விசாரணை இன்றி தள்ளுபடி

எவன்கார்ட் நிறுவனம் நடத்தி வந்த மூன்று ஆயுதக் களஞ்சியங்களை அகற்றுமாறு பாதுகாப்பு...