நாளை இடம்பெறவுள்ள க.பொ.த உயர்தர பரீட்சை தொடர்பில் புதிய அறிவிப்பு!

Date:

நாளை (23.01.2023) ஆரம்பமாகவுள்ள உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்கு மேலதிகமாக மேலும் 10 நிமிட நேரத்தை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பரீட்சைகள் திணைக்களத்தில் இன்று (22.01.2023) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

கட்டுரை வினாத்தாளுக்கான 3 மணித்தியால கால அவகாசம் வழங்கப்பட்டதன் பின்னர் மேலதிகமாக 10 நிமிடங்களை மாணவர்களுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

“இந்த மேலதிக 10 நிமிடங்கள், 3 மணிநேர கட்டுரை வினாத்தாள்களுக்கு வழங்கப்படுகிறது. பல்தேர்வு வினாக்கள் கொண்ட வினாத்தாள்களுக்கு மேலதிக நேரம் கொடுக்கப்படவில்லை.

பெரும்பாலான நேரங்களில், ஒரு மணிநேர வினாத்தாள் பல் தேர்வு என்று அழைக்கப்படுகிறது. அது பல்தேர்வு இல்லை. நீங்கள் அனைத்து வினாக்களுக்கும் விடை எழுத வேண்டும்.

அந்த வினாத்தாளிற்கு நீங்கள் முதலில் கேள்விகளை நன்றாக படித்து விடையளியுங்கள்.

பரீட்சையில் கூடுதலாக 10 நிமிடம் கொடுத்துள்ளோம். அதாவது காலை 8.30 மணிக்கு வழங்கப்படும் வினாத்தாளுக்கான, விடைத்தாள் 11.40 இற்கு பெற்றுக்கொள்ளப்படும்.எனவே மொத்தமாக  3 மணித்தியாலமும் 10 நிமிடங்களும் வழங்கப்பட்டுள்ளது.”என கூறியுள்ளார்.

 

Popular

More like this
Related

நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!

நேபாள நாடாளுமன்றத் தோ்தலில், இளைஞா்களின் ஆதரவு பெற்ற ‘ராப்’ பாடகரும், முன்னாள்...

நாட்டில் இன்று வறட்சியான வானிலை!

நாட்டில் இன்று (07) வறட்சியான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்...

இலங்கையிலுள்ள அமெரிக்கர்களுக்குத் தூதரகம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய சூழ்நிலைக்கு மத்தியில், புதிய பாதுகாப்புத் தகவல்களைப்...

இலங்கை எடுத்துள்ள தீர்மானம் ஆபத்தானது, ஆனால் துணிச்சலானது!

ஈரானுக்குச் சொந்தமான IRIS Bushehr கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைவதற்கும்,...