மின் கட்டண அதிகரிப்பு தொடர்பிலான இறுதி தீர்மானம் இன்று!

Date:

மீண்டும் மின்சார கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பான இறுதி தீர்மானம் இன்று(09) இடம்பெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் எட்டப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட மின் கட்டண திருத்த யோசனை தொடர்பில் அமைச்சர்களின் கருத்துகளைப் பெறும் நோக்கில் ஒரு வாரம் கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில்,  யோசனைக்கு அமைச்சரவையின் அங்கிகாரம் கிடைக்கும் என்று நம்புவதாக  வலுச்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்ற கடந்த அமைச்சரவை கூட்டத்தில் மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவினால் மின்கட்டணத்தை அதிகரிப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டது.

பொது பயன்பாடுகள் ஆணைக்குழு உள்ளிட்ட பல தரப்பினர் எதிர்ப்பை வெளியிட்டிருந்த நிலையில், இந்த யோசனை அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டது.

எனினும் அன்றைய தினம் மின்கட்டணத்தை அதிகரிப்பதற்கான யோசனை இன்று இடம்பெறவுள்ள அமைச்சரவை கூட்டம் வரை ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பாதுகாப்பு மற்றும் தற்காப்பு ஒத்துழைப்பு: சிரியா சென்றடைந்தார் உக்ரைன் ஜனாதிபதி.

உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஷெலென்ஸ்கி மற்றும் துருக்கி வெளியுறவு அமைச்சர் ஹக்கன் ஃபிடான்...

புத்தாண்டு காலத்தில் இணையவழி மோசடி: பொலிஸார் எச்சரிக்கை

இணையவழி பணப்பரிமாற்றங்களின் போது பொதுமக்களை ஏமாற்றி முன்னெடுக்கப்படும் நிதி மோசடி குறித்து...

மத்திய கிழக்கு மோதல்: ஐநா உடனடியாகத் தலையிடக் கோரி கொழும்பில் ஐநா அலுவலகத்தில்’தர்மசக்தி அமைப்பு’ மகஜர் கையளிப்பு.

இலங்கையில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக மத நல்லிணக்கத்திற்காகப் பணியாற்றி வரும் பௌத்த,...

QR கொடுப்பனவை ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி

புதிய QR முறை கொடுப்பனவுக்கு அப்பாற் சென்ற கலாசார ரீதியிலான பிணைப்பாக...