முஸ்லிம்கள் மற்றும் பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகளை தீர்க்க ஜனாதிபதி கவனம்!

Date:

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களின் தலையீட்டில் வடக்கு மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட்டவுடன் பெருந்தோட்ட மற்றும் முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார்.

வடக்கு மக்களின் பல பிரச்சினைகளுக்கு ஏற்கனவே தீர்வு காண நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதன் பின்னணியிலேயே ஜனாதிபதி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக ஜனாதிபதி அலுவலகத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

நாட்டிலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் பங்களிப்புடன் நடைபெற்ற சர்வகட்சி கூட்டத்தில்  கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்த கருத்துக்களுக்கு அமைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வடக்கு மக்களின் பிரச்சினைகளை தீர்க்க நேரடியான தலையீடுகளை வழங்கினார்.

வடக்கில் உள்ள மக்களின் பல பிரச்சினைகளுக்கு ஏற்கனவே தீர்வு காணத் தொடங்கியுள்ள நிலையில், பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் பணிகளை உடனடியாக ஆரம்பிக்க ஜனாதிபதி உத்தேசித்துள்ளதாக ஜனாதிபதி அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கியதன் பின்னர், இந்நாட்டில் முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்க்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தேசித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்தார்.

பெருந்தோட்ட மற்றும் முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதில் ஆளும் கட்சியின் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களை ஈடுபடுத்த ஜனாதிபதி மேலும் உத்தேசித்துள்ளார்.

Popular

More like this
Related

இலங்கை ஆயுர்வேத மருந்து கூட்டுத்தாபனத்தின் 7 புதிய தயாரிப்புகள் நாளை அறிமுகம்!

நாளை (30) முற்பகல் 10.00 மணிக்கு நாவின்ன ஆயுர்வேத மருந்து கூட்டுத்தாபன...

இலங்கையில் வரலாற்று உச்சத்தை எட்டியுள்ள சுற்றுலாப் பயணிகளின் வருகை!

ஓர் ஆண்டில் இலங்கைக்கு வருகை தந்த அதிகூடிய சுற்றுலாப் பயணிகளின் சாதனை...

கொழும்பு மாநகர சபையின் வரவு, செலவுத்திட்டம் மீண்டும் 31 இல்

கொழும்பு மாநகர சபையின் 2026ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத்திட்டம் இரண்டாவது வாசிப்புக்காக...

அரபு மொழிக்கான ‘தோஹா வரலாற்று கலைக்களஞ்சியம் பணிகள்’ பூர்த்தி!

12 ஆண்டுகளாக தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வு மற்றும் தொகுப்பு முயற்சிகளின் பயனாக,...