மொனராகலை உயர் பொலிஸ் அதிகாரி STF அதிகாரிகளினால் அதிரடி கைது!

Date:

மொனராகலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

350 கஞ்சா செடிகளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ், அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கிடைக்கப் பெற்ற இரகசிய தகவல் ஒன்றுக்கு அமைய, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் வீட்டில் நேற்றிரவு விசேட அதிரடிபடையினர் சோதனைகளை நடத்தியுள்ளனர்.

இதன்போது, 350 கஞ்சா செடிகள் மற்றும் நவீன உலோக ஸ்கேனர் இயந்திரமொன்றும் மீட்கப்பட்டுள்ளன.

சந்தேக நபரை மொனராகலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

உணவு பொருட்களின் விலையும் அதிகரிப்பு

சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து இன்று நள்ளிரவு முதல் உணவு...

அதிகரித்துள்ள லிட்ரோ சமையல் எரிவாயு விலை: புதிய விலைப்பட்டியல்

உள்நாட்டு சமையல் எரிவாயு விற்பனை நிறுவனங்களான லிட்ரோ கேஸ் நிறுவனமும், லாஃப்ஸ் கேஸ்...

ஜனாதிபதி தலைமையில் ‘தேசிய QR கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டம்’ இன்று ஆரம்பம்!

இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தில் ஒரு புதிய மைல் கல்லைக் குறிக்கும் வகையில்,...

நாட்டின் பல பகுதிகளில் பி.ப. 2.00 மணிக்கு பின்னர் மழை

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மழை பெய்யுமென...