யாழ்ப்பாணத்தில் பல வேட்பு மனுக்கள் நிராகரிப்பு!

Date:

யாழ்.மாவட்டத்தில் சில அரசியல் கட்சிகளின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார்.

யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 157 வேட்பு மனுக்களில் 150 வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதோடு 7 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக வல்வெட்டித்துறை நகர சபை மற்றும் வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபை ஆகியவற்றில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

வேலணை பிரதேச சபையில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்புமனு முற்றாக நிராகரிக்கப்பட்டுள்ளதுடன் வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபையில் பகுதியளவிலும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

வேலணை பிரதேச சபையில் தமிழ் மக்கள் கூட்டமைப்பின் வேட்புமனு முழுமையாகவும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையில் பகுதியளவும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஊர்காவற்றுறை பிரதேச சபையில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

வலிகாமம் தெற்கு பிரதேச சபையில் புதிய லங்கா நிதாஹஸ் பக்ஷயவின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

யாழ்.மாவட்டத்தில் வேட்புமனு தாக்கல் செய்த சுயேச்சைக் குழுக்களின் வேட்பு மனுக்கள் எதுவும் நிராகரிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...