அக்குறணைக்கான பெருமை அல்ல, இலங்கைக்கான பெருமை: கத்தார் கிராத் போட்டியில் அஷ்ஷெய்க் காரி ஜாமில் ஹாபிழ் முதல் 100 இடங்களுக்குள்!

Date:

கத்தாரால் ஏற்பாடு செய்யப்பட்ட உலக அல் குர்ஆன் “கிராத்” போட்டியில் அக்குறணையைச் சேர்ந்த அஷ்-ஷெய்க் காரி ஜாமில் ஹாபிழ் முதல் 100 இடங்களுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஆன்லைனில் நடந்த இந்த போட்டியில் உலகெங்கிலும் உள்ள 1273 காரிகள் கலந்து கொண்டனர், மேலும் முதல் 100 பேர் அடுத்த சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதில் காரி ஜாமில் ஹாபிழ் மட்டும் இலங்கையில் இருந்து தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கத்தாரால் நடத்தப்படும் மிகப்பெரிய உலக அல் குர்ஆன் போட்டி இதுவாகும். தேர்ந்தெடுப்பவர்கள் பெரிய சர்வதேச காரிகள் ஆவார்கள். காரி ஜாமில் ஹாபிழின் வெற்றி இலங்கைத் நாட்டிற்கும் அக்குறணைக்கும் மிகவும் பெருமையான தருணமாகும்.

கத்தார் தோஹாவில் விரைவில் நடைபெறவிருக்கும் காரி ஜாமில் ஹாபிழின் அடுத்த சுற்றுக்காக நியூஸ் நவ் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்து கொள்கின்றோம்.

Popular

More like this
Related

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...