இலங்கையின் மிகப் பெரிய கரிம உரம் தயாரிக்கும் தொழிற்சாலை!

Date:

இலங்கையின் மிகப் பெரிய கரிம உரம் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று பன்னலவில் இன்று (30) திறந்து வைக்கப்பட்டது.

கொரிய அரசாங்கத்திற்குச் சொந்தமான  நிறுவனமான Hyosong OnB,  தொழிற்சாலையிலிருந்து 100வீத சுற்றுச்சூழலுக்கு உகந்த கரிம சிறுமணி உரங்களைத் தயாரிக்கிறது.

இத்தொழிற்சாலையானது முழுமையாக உயர்தொழில்நுட்ப உபகரணங்களுடன் பொருத்தப்பட்டிருப்பதாகவும், கரிம உரங்களை உற்பத்தி செய்வதற்கு ரோபோ தொழில்நுட்பம் கூட பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் இலங்கையின் பெருந்தோட்டத் தொழிலுக்குத் தேவையான 1800 மெட்ரிக் தொன் உயர்தர கரிம உரங்களை உற்பத்தி செய்யவுள்ளது.

விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர, இலங்கைக்கான தென்கொரிய தூதுவர் வூங்ஜின் ஜியோங், விவசாய இராஜாங்க அமைச்சர் மொஹான் டி சில்வா, அமைச்சின் செயலாளர் குணதாச சமரசிங்க ஆகியோரும் Hysong OnB Granular உர நிறுவனத்தின் புதிய தொழிற்சாலையை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Popular

More like this
Related

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...