இலங்கையின் மிகப் பெரிய கரிம உரம் தயாரிக்கும் தொழிற்சாலை!

Date:

இலங்கையின் மிகப் பெரிய கரிம உரம் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று பன்னலவில் இன்று (30) திறந்து வைக்கப்பட்டது.

கொரிய அரசாங்கத்திற்குச் சொந்தமான  நிறுவனமான Hyosong OnB,  தொழிற்சாலையிலிருந்து 100வீத சுற்றுச்சூழலுக்கு உகந்த கரிம சிறுமணி உரங்களைத் தயாரிக்கிறது.

இத்தொழிற்சாலையானது முழுமையாக உயர்தொழில்நுட்ப உபகரணங்களுடன் பொருத்தப்பட்டிருப்பதாகவும், கரிம உரங்களை உற்பத்தி செய்வதற்கு ரோபோ தொழில்நுட்பம் கூட பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் இலங்கையின் பெருந்தோட்டத் தொழிலுக்குத் தேவையான 1800 மெட்ரிக் தொன் உயர்தர கரிம உரங்களை உற்பத்தி செய்யவுள்ளது.

விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர, இலங்கைக்கான தென்கொரிய தூதுவர் வூங்ஜின் ஜியோங், விவசாய இராஜாங்க அமைச்சர் மொஹான் டி சில்வா, அமைச்சின் செயலாளர் குணதாச சமரசிங்க ஆகியோரும் Hysong OnB Granular உர நிறுவனத்தின் புதிய தொழிற்சாலையை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Popular

More like this
Related

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...