உள்ளூராட்சி தேர்தலில் யானையும் மொட்டும் இணைகிறது!

Date:

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் இணைந்து போட்டியிட தீர்மானித்துள்ளன.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று (10) இடம்பெற்ற கலந்துரையாடலில் 3 விடயங்கள் தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அங்கு இரு கட்சிகளும் தங்களுக்கு சாதகமாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு மொட்டு அல்லது யானை சின்னத்தில் போட்டியிட முடிவு செய்துள்ளன.

பல உள்ளூராட்சி மன்றங்கள் பொதுச் சின்னத்தில் போட்டியிடுவதற்கும் ஏனைய உள்ளூராட்சி மன்றங்களுக்கு தனித்து போட்டியிடுவதற்கும் உள்ளூராட்சி மன்றங்களை ஸ்தாபிப்பதில் ஒன்றிணைந்து அமைப்பதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் வஜிர அபேவர்தன, ரங்கே பண்டார, ருவான் விஜயவர்தன ஆகியோரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் மஹிந்தானந்த அலுத்கமகே, ரோஹித அபேகுணவர்தன, சஞ்சீவ எதிரிமான்ன ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர்.

Popular

More like this
Related

புதிய கல்விச் சபைக்கான பரிந்துரைகள் முன்மொழிவு: பொதுமக்களின் கருத்துகளுக்கு அழைப்பு!

இலங்கையின் ஒட்டுமொத்தக் கல்வியின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில்,  பிரதமரும் கல்வி, உயர்கல்வி...

அரபு நாடுகளின் தூதுவர்களுடன் ஜனாதிபதி சந்திப்பு: மத்திய கிழக்கில் அமைதி நிலவ இலங்கை ஆதரவு!

இலங்கைக்கான அரபு நாடுகளின் தூதுவர் பேரவையின்  உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி அநுர குமார...

ஜும்ஆ பிரசங்கங்களில் நடுநிலையையும், சமூகப் பொறுப்பையும் கடைப்பிடியுங்கள்; முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் புதிய வழிகாட்டல்.

இலங்கையில் உள்ள பள்ளிவாசல்களில் நிகழ்த்தப்படும் ஜும்ஆ பிரசங்கங்களின் போது,  சர்வதேச விவகாரங்கள்...

தேசிய அடையாள அட்டை பெறுவோருக்கு அறிவிப்பு!

தேசிய அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொள்வதற்கான ஒருநாள் சேவையானது, அத்தியாவசியத் தேவையுள்ளவர்களுக்காக மட்டும்...