உள்ளூராட்சி தேர்தலில் யானையும் மொட்டும் இணைகிறது!

Date:

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் இணைந்து போட்டியிட தீர்மானித்துள்ளன.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று (10) இடம்பெற்ற கலந்துரையாடலில் 3 விடயங்கள் தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அங்கு இரு கட்சிகளும் தங்களுக்கு சாதகமாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு மொட்டு அல்லது யானை சின்னத்தில் போட்டியிட முடிவு செய்துள்ளன.

பல உள்ளூராட்சி மன்றங்கள் பொதுச் சின்னத்தில் போட்டியிடுவதற்கும் ஏனைய உள்ளூராட்சி மன்றங்களுக்கு தனித்து போட்டியிடுவதற்கும் உள்ளூராட்சி மன்றங்களை ஸ்தாபிப்பதில் ஒன்றிணைந்து அமைப்பதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் வஜிர அபேவர்தன, ரங்கே பண்டார, ருவான் விஜயவர்தன ஆகியோரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் மஹிந்தானந்த அலுத்கமகே, ரோஹித அபேகுணவர்தன, சஞ்சீவ எதிரிமான்ன ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர்.

Popular

More like this
Related

NPP அரசுக்கு சவாலாக மிலிந்த மொரகொட முயற்சியில் புதிய எதிர்க்கட்சிக் கூட்டணி. ஹக்கீம், ரிஷாதும் இணைவு

தேசிய மக்கள் கட்சி அரசாங்கத்துக்கு சவால் விடுக்கும் வகையில் ஒரு பரந்த...

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் கைது!

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் பொலிஸ்மா அதிபர்...

சுகாதார அமைச்சில் விடுமுறை வழங்குவது இடைநிறுத்தம்

சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சு அதன் பணியாளர்களுக்கான விடுமுறை அனுமதிகளை...