களுத்துறை புகையிரத நிலையத்திற்கு அருகில் புகையிரதம் ஒன்று தடம் புரண்டதால் கரையோர புகையிரத சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
களுத்துறையிலிருந்து மருதானை நோக்கி பயணித்த புகையிரதமே தடம் புரண்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
தடம்புரண்ட ரயிலை மீள்தடமேற்றும் நடவடிக்கைகள் இடம்பெறுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.