குருநாகல் மேயர் துஷார சஞ்சீவ பதவி நீக்கம் :வர்த்தமானி வெளியானது!

Date:

குருநாகல் நகர மேயர் துஷார சஞ்சீவ பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

வடமேல் மாகாண ஆளுநர் வசந்த கரன்னாகொட வர்த்தமானி மூலம் இதனை அறிவித்துள்ளார்.

2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட ஆவணம் நிறைவேற்றப்படாமை மற்றும் 2020 மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் மற்றும் அமுலாக்க உத்தரவுகளுக்கு இணங்காத காரணத்தினால் குருநாகல் மேயர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேயர் பதவி நீக்கம் 2022 டிசம்பர் 31ஆம் திகதிமுதல் அமுலுக்கு வந்துள்ளதாக ஆளுநர் வெளியிட்ட வர்த்தமானி அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மேயர் பதவி வெற்றிடமாக இருப்பதைக் கருத்தில் கொண்டு, அதன் கடமைகளை உள்ளடக்கும் பொறுப்பு, பிரதி மேயருக்கு வழங்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...