குருநாகல் மேயர் துஷார சஞ்சீவ பதவி நீக்கம் :வர்த்தமானி வெளியானது!

Date:

குருநாகல் நகர மேயர் துஷார சஞ்சீவ பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

வடமேல் மாகாண ஆளுநர் வசந்த கரன்னாகொட வர்த்தமானி மூலம் இதனை அறிவித்துள்ளார்.

2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட ஆவணம் நிறைவேற்றப்படாமை மற்றும் 2020 மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் மற்றும் அமுலாக்க உத்தரவுகளுக்கு இணங்காத காரணத்தினால் குருநாகல் மேயர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேயர் பதவி நீக்கம் 2022 டிசம்பர் 31ஆம் திகதிமுதல் அமுலுக்கு வந்துள்ளதாக ஆளுநர் வெளியிட்ட வர்த்தமானி அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மேயர் பதவி வெற்றிடமாக இருப்பதைக் கருத்தில் கொண்டு, அதன் கடமைகளை உள்ளடக்கும் பொறுப்பு, பிரதி மேயருக்கு வழங்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

ரமழானை முன்னிட்டு பேரீச்சம்பழத்திற்கு வரிச்சலுகை

ரமழான் நோன்பு காலத்தில் இலவசமாக விநியோகிப்பதற்காக இறக்குமதி செய்யப்படும் பேரீச்சம்பழத்துக்கு வரிச்சலுகையை...

இஸ்ரேலில் இலங்கையர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகள்!

இஸ்ரேல் நாட்டில் உள்ள வர்த்தக மற்றும் சேவைத் துறைகளில் நிலவும் வெற்றிடங்களுக்கு...

டிசம்பர் மாதத்திற்கான முதியோர் உதவித்தொகை நாளை பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தல்

டிசம்பர் மாதத்திற்கான முதியோர் உதவித்தொகையை தபால் நிலையங்கள் மூலம் இதுவரை பெறாத...

போக்குவரத்து அபராதங்களைச் செலுத்த GovPay முறைமை 7 மாகாணங்களில் அமுல்

போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பான அபராதங்களைச் செலுத்தக்கூடிய GovPay முறைமையானது தற்போது இலங்கையின்...