‘கொழும்பு மேயர் வேட்பாளர் நானே’: அடம்பிடிக்கும் ரோஸி

Date:

கொழும்பு மேயர் ரோசி சேனாநாயக்க உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் இரண்டாவது தவணைக்காக போட்டியிடவுள்ளார் மற்றும் ஏற்கனவே தனது வேட்பு மனுக்களை கையளித்துள்ளார்.

கொழும்பு மாநகர சபைக்கான தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் நானே மேயர் வேட்பாளராகப் போட்டியிடுகின்றேன் என்று கொழும்பு மாநகர சபையின் தற்போதைய மேயர் ரோஸி சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாநகர சபைக்கு பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி  இணைந்து யானைச் சின்னத்தில் போட்டியிடுகின்றது.

கொழும்பு மாநகர சபைக்கு இரு கட்சிகளும் இணைந்து போட்டியிடவுள்ளதாக பெயர் குறிப்பிட விரும்பாத கொழும்பு மாநகர சபையின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

எனினும் கொழும்பு மாநகர சபைக்கான மேயர் வேட்பாளர் குறித்து கட்சி இன்னும் முடிவெடுக்கவில்லை என்று ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அதேவேளை ஐக்கிய மக்கள் சக்தியின் மேயர் வேட்பாளராக முஜிபுர் ரஹ்மான் போட்டியிடுகின்றார்.

 

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...