‘கொழும்பு மேயர் வேட்பாளர் நானே’: அடம்பிடிக்கும் ரோஸி

Date:

கொழும்பு மேயர் ரோசி சேனாநாயக்க உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் இரண்டாவது தவணைக்காக போட்டியிடவுள்ளார் மற்றும் ஏற்கனவே தனது வேட்பு மனுக்களை கையளித்துள்ளார்.

கொழும்பு மாநகர சபைக்கான தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் நானே மேயர் வேட்பாளராகப் போட்டியிடுகின்றேன் என்று கொழும்பு மாநகர சபையின் தற்போதைய மேயர் ரோஸி சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாநகர சபைக்கு பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி  இணைந்து யானைச் சின்னத்தில் போட்டியிடுகின்றது.

கொழும்பு மாநகர சபைக்கு இரு கட்சிகளும் இணைந்து போட்டியிடவுள்ளதாக பெயர் குறிப்பிட விரும்பாத கொழும்பு மாநகர சபையின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

எனினும் கொழும்பு மாநகர சபைக்கான மேயர் வேட்பாளர் குறித்து கட்சி இன்னும் முடிவெடுக்கவில்லை என்று ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அதேவேளை ஐக்கிய மக்கள் சக்தியின் மேயர் வேட்பாளராக முஜிபுர் ரஹ்மான் போட்டியிடுகின்றார்.

 

Popular

More like this
Related

நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!

நேபாள நாடாளுமன்றத் தோ்தலில், இளைஞா்களின் ஆதரவு பெற்ற ‘ராப்’ பாடகரும், முன்னாள்...

நாட்டில் இன்று வறட்சியான வானிலை!

நாட்டில் இன்று (07) வறட்சியான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்...

இலங்கையிலுள்ள அமெரிக்கர்களுக்குத் தூதரகம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய சூழ்நிலைக்கு மத்தியில், புதிய பாதுகாப்புத் தகவல்களைப்...

இலங்கை எடுத்துள்ள தீர்மானம் ஆபத்தானது, ஆனால் துணிச்சலானது!

ஈரானுக்குச் சொந்தமான IRIS Bushehr கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைவதற்கும்,...