ஜனவரி மாதத்தில் மட்டும் 158.7 பில்லியன் ரூபாய்களையே அரசாங்கம் வரிகளாக பெற்றுள்ளது என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று காலை இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் மற்றும் சமுர்த்தி கொடுப்பனவுகள் உட்பட அரச செலவீனம் 367.8 பில்லியன்கள் என குறிப்பிட்டுள்ளார்.
குறித்த செலவீனமானது ஜனவரி 27 ஆம் திகதி வரையானது என்றும் அமைச்சரவைப் பேச்சாளர் இதன்போது அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.