தீ விபத்தில் தாய், மகன், மகள் உயிரிழப்பு!

Date:

மன்கடவல, அலயபத்துவ பிரதேசத்தில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.

மஹாமன்கடவல, வெவபாறை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இன்று (27) காலை ஏற்பட்ட திடீர் தீயினால் தாய், மகள் மற்றும் மகன் ஆகியோர் உயிரிழந்துள்ளதாக எலயாபத்துவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த வீட்டின் உரிமையாளரான சமந்தா என்பவர் பலத்த தீக்காயங்களுடன் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முதற்கட்ட விசாரணையில், இந்த வீட்டுக்கு வேறு வீட்டில் இருந்து மின்சாரம் வழங்கப்பட்டு வந்ததும், அந்த அறையில் பெட்ரோல் போத்தல் ஒன்று இருந்ததும் தெரிய வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

தீ விபத்தையடுத்து அயலவர்கள் சிறிது நேரத்தில் தீயை அணைத்துள்ளனர்.

இருப்பினும் அறையில் உறங்கிக் கொண்டிருந்த தாய், மகள் மற்றும் மகன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

Popular

More like this
Related

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...

சொத்து விபரங்களை வழங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு 2 வார காலக்கெடு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், தனது சொத்து மற்றும் பொறுப்புக்கள்...