தேர்தல் நடத்த பணம் இல்லை என்றால், இராஜாங்க அமைச்சர்கள் எதற்கு? :பீரிஸ்

Date:

தேர்தலை நடத்த பணம் இல்லை என்றால், இராஜாங்க அமைச்சர்கள் 39 பேரை நீக்க வேண்டும் என சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இன்று சுதந்திர மக்கள் காங்கிரஸ் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட  போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

 

 

நாட்டில் தேர்தலை நடத்துவதற்கு நிதி இல்லை என்று அரசாங்கம் போலியான பிரசாரங்களை செய்து வருகிறது. உண்மையில் நிதி இல்லை என்றால் நாட்டிலுள்ள 39 இராஜாங்க அமைச்சர்களை நீக்க வேண்டும்.

அத்துடன் 39 இராஜாங்க அமைச்சர்களுக்காக 340 வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதற்கு பாரியளவில் நிதி செலவிடப்படுகிறது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இராஜாங்க அமைச்சர்கள் எவருமில்லாது நாட்டை ஒரு வருடம் ஆட்சி செய்தார்” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (22) கைது செய்யப்பட்டுள்ளார். அந்த வகையில்...

சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தபால் தொழிற்சங்கத்தினர்

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தபால் தொழிற்சங்கங்கள் கொழும்பில் அமைந்துள்ள மத்திய தபால் பரிமாற்றத்திற்கு...

மே 9 கலவரம்: இம்ரான் கானுக்கு பிணை வழங்கிய பாகிஸ்தான் உச்சநீதிமன்றம்!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர்...

அமைச்சரின் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள முடியாது: இன்றும் தொடரும் தபால் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு

5ஆவது நாளாகவும் தொடரும் பணிப்புறக்கணிப்பு காரணமாக மத்திய தபால் பரிமாற்றத்திற்கு பொலிஸ்...