புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள்கள் பரிசீலனை இறுதி கட்டத்தில்..!

Date:

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி 99 வீதம் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்த விடைத்தாள்களில் ஏதேனும் பிரச்னைகள் உள்ளதா என பல கட்டங்களின் கீழ் சோதனை நடத்தப்பட்டு வருவதாக  பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.

பணி முடிந்ததும் தேர்வு முடிவுகள் கணினிமயமாக்கும் பணி தொடங்கும். புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் பல பிரச்சினைகள் பதிவாகிய சம்பவங்கள் தொடர்பான விசாரணைகள் தற்போது நிறைவடைந்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

அநீதி இழைக்கப்பட்ட மாணவர்கள் யாரேனும் இருந்தால், தேர்வு முடிவுகள் வெளியாவதற்குள் அவர்களுக்கு நீதி வழங்கப்படும். 5ம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இம்மாதத்திற்குள் வெளியிடப்படும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

2022 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை கடந்த டிசம்பர் 18 ஆம் திகதி நடைபெற்றது. நாடளாவிய ரீதியில் 2,894 நிலையங்களில் நடைபெற்ற பரீட்சைக்கு மூன்று இலட்சத்து முப்பத்து நாலாயிரத்து அறுநூற்று தொண்ணூற்று எட்டு மாணவர்கள் தோற்றியதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

Popular

More like this
Related

மாணவர்களுக்கான காலணி வவுச்சர்கள் : செல்லுபடி காலம் நீடிப்பு!

2026 ஆம் ஆண்டிற்காகத் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்கள், பிரிவெனாக்களில் கல்வி...

முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டச் சீர்திருத்தங்களை முன்னெடுக்க அனைத்துத் தரப்பினரும் ஒருமித்துச் செயற்பட வேண்டும்!

-என்.எம்.எம்.மிஃப்லி முன்னாள் இறைவரி திணைக்கள ஆணையாளர்.       முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்து சட்டமூலம்: ஆண் பெண்...

பாடசாலைகளின் முதலாம் தவணையின் முதலாம் கட்டம் இன்றுடன் நிறைவு

2026 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளின் முதலாம் தவணையின் முதலாம் கட்டம் இன்றுடன்...

பெண்ணியம் பேசிய அதிகாரியின் மறுபக்கம்: ஜெஃப்ரி எப்ஸ்டீன் ஆவணங்களில் சிக்கிய ஐக்கிய அரபு அமீரக அதிகாரி ஹிந்த் அல் ஒவைஸ்.

சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய ஜெஃப்ரி எப்ஸ்டீன் (Jeffrey Epstein)...