5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை: மேல் மாகாணத்தில் 10,585 மாணவர்கள் சித்தி!

Date:

2022 ஆம் ஆண்டு ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் 48,257 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.

டிசம்பர் மாதம் நடைபெற்ற தேர்வில் மொத்தம் 329,668 மாணவர்கள் தோற்றியிருந்தனர்.

புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த அதிகளவான மாணவர்கள் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மாகாண ரீதியாக சித்தியடைந்த மாணவர்களின் எண்ணிக்கை விபரம் இதோ!

  • மேல் மாகாணம்- 10,585
  • தென் மாகாணம்- 6,812
  • வடமேல் மாகாணம்- 6,601
  • சப்ரகமுவ மாகாணம்- 5,170
  • மத்திய மாகாணம்- 5,017
  • வடமத்திய மாகாணம்- 3,957
  • ஊவா மாகாணம்- 887
  • கிழக்கு மாகாணம்- 3,479
  • வட மாகாணம்- 2,749

பரீட்சையில் சித்தியடைந்த சுமார் 20,000 மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, மீள் திருத்தத்திற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும்.

Popular

More like this
Related

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...

சொத்து விபரங்களை வழங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு 2 வார காலக்கெடு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், தனது சொத்து மற்றும் பொறுப்புக்கள்...