ஆணைக்குழுவின் கடமைகளில் அரசியல் அழுத்தம்!

Date:

சுயாதீன ஆணைக்குழுவினால் வழங்கப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்தாமை தொடர்பில் இன்று (30) முதல் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்திருந்தார்.

நேற்று மாலை விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடாத்திய அவர், சுயாதீன ஆணைக்குழுவின் வகிபாகம் சுயாதீனமாக செயற்படுவதே தவிர அரசியல் அதிகாரத்தின் தீர்மானங்களை அமுல்படுத்துவதல்ல. அமைச்சர் காஞ்சன விஜேசேகர நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கோட்டாபய ராஜபக்சவிடம் தானே தலைமை பதவியை கேட்டதாக கூறியது தெரியாத கதை என அவர் தெரிவித்திருந்தார்.

இதுபோன்ற சுயாதீன ஆணைக்குழுக்கள் வழங்கும் தீர்மானங்களை நடைமுறைப்படுத்தாதது ஆணைக்குழுக்களின் சுதந்திரத்தை அவமதிக்கும் செயலாகும். அதன்படி இன்று முதல் இதற்கு தேவையான சட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம் என்றும் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்திருந்தார்.

Popular

More like this
Related

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...

சொத்து விபரங்களை வழங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு 2 வார காலக்கெடு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், தனது சொத்து மற்றும் பொறுப்புக்கள்...