பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு போக்குவரத்து வசதிகளை ஒழுங்குபடுத்தும் வகையில் ரயில்வே திணைக்களம் முக்கிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
2022ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைகள் நாளை (திங்கட்கிழமை) முதல் ஆரம்பமாகி நடைபெறவுள்ளது.
அதற்கமைய மலைநாட்டு ரயில் பாதையின் ஊடாக 16 விசேட ரயில் சேவைகள் மாணவர்களின் நலனை கருத்திற்கொண்டு இயக்கப்படவுள்ளது.
அதேநேரம் கரையோர மார்க்கமாக 14 ரயில் சேவைகள் இயங்கவிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.