தினேஷ் ஷாப்டரின் கொலை தொடர்பாக நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு!

Date:

ஜனசக்தி குழுமத்தின் பணிப்பாளர் தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பான விசாரணைகளுக்காக தடயவியல் அறிக்கைகளை கோருமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு கொழும்பு மேலதிக நீதவான் ராஜீந்திர ஜயசூரிய நேற்று உத்தரவிட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் முன்னிலையாகி விடுத்த கோரிக்கையை பரிசீலித்த நீதவான் பின்வரும் உத்தரவை பிறப்பித்தார்.

இச்சம்பவம் தொடர்பில் தற்போது விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாலும், நிபுணர் அறிக்கைகளை பெற்றுக்கொள்வது அவசியமானதாலும் குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்திற்கு தேவையான உத்தரவுகளை பிறப்பிக்குமாறு கோரியுள்ளது.

இதேவேளை இந்த மரணம் கொலையா அல்லது தற்கொலையா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

எனவே, குற்றம் நடந்த இடத்தில் கிடைத்த வயர் கேபிள்கள், ரத்தக்கறை படிந்த துணி, தினேஷ் ஷாப்டரின் விரல் நகங்கள் உள்ளிட்ட ஆதாரங்களை தடயவியல் ஆய்வாளருக்கு அனுப்பி வைக்குமாறு நீதிமன்றத்தில் கேட்டுக் கொண்டனர்.

அதுமட்டுமின்றி தொலைபேசி பகுப்பாய்வு அறிக்கையும் இன்று (02) நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

Popular

More like this
Related

பாகிஸ்தானிலிருந்து மேலும் ஒருதொகை நிவாரணம் இலங்கைக்கு கையளிப்பு!

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக பாகிஸ்தான் அரசாங்கத்தால் நன்கொடையாக வழங்கப்பட்ட மனிதாபிமான...

தஃவா அமைப்புக்களை பரஸ்பரம் புரிந்துகொள்ள வைப்பதில் பங்காற்றிவரும் அனர்த்த நிவாரணப்பணிகள்

அண்மையில் ஏற்பட்ட டிட்வா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட கம்பளை மற்றும் கெலிஓயா...

அவுஸ்திரேலியாவின் துப்பாக்கிச் சூடு குறித்து ஜனாதிபதி அனுர இரங்கல்!

அவுஸ்திரேலியாவின் சிட்னி, பொண்டி கடற்கரையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 16...

ஹமாஸின் மூத்த தளபதி ரேத் சயீத் காசாவில் படுகொலை!

காசாவில் ஹமாஸின் மூத்த தளபதி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள்...