தினேஷ் ஷாப்டரின் கொலை தொடர்பாக நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு!

Date:

ஜனசக்தி குழுமத்தின் பணிப்பாளர் தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பான விசாரணைகளுக்காக தடயவியல் அறிக்கைகளை கோருமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு கொழும்பு மேலதிக நீதவான் ராஜீந்திர ஜயசூரிய நேற்று உத்தரவிட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் முன்னிலையாகி விடுத்த கோரிக்கையை பரிசீலித்த நீதவான் பின்வரும் உத்தரவை பிறப்பித்தார்.

இச்சம்பவம் தொடர்பில் தற்போது விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாலும், நிபுணர் அறிக்கைகளை பெற்றுக்கொள்வது அவசியமானதாலும் குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்திற்கு தேவையான உத்தரவுகளை பிறப்பிக்குமாறு கோரியுள்ளது.

இதேவேளை இந்த மரணம் கொலையா அல்லது தற்கொலையா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

எனவே, குற்றம் நடந்த இடத்தில் கிடைத்த வயர் கேபிள்கள், ரத்தக்கறை படிந்த துணி, தினேஷ் ஷாப்டரின் விரல் நகங்கள் உள்ளிட்ட ஆதாரங்களை தடயவியல் ஆய்வாளருக்கு அனுப்பி வைக்குமாறு நீதிமன்றத்தில் கேட்டுக் கொண்டனர்.

அதுமட்டுமின்றி தொலைபேசி பகுப்பாய்வு அறிக்கையும் இன்று (02) நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

Popular

More like this
Related

இவ்வருட அரச வெசாக் பண்டிகை மாத்தறையில்!

இவ்வருட அரச வெசாக் பண்டிகையை மாத்தறை மாவட்டம், கம்புறுபிட்டிய, திஹகொட மிதெல்லவல...

பங்களாதேஷில் இன்று பொதுத்தோ்தல்:இந்தியாவுடனான உறவு இயல்புக்கு திரும்புமா?

அண்டை நாடான பங்களாதேஷில் 13-ஆவது நாடாளுமன்றத் தோ்தலின் வாக்குப்பதிவு இன்று வியாழக்கிழமை...

நாட்டின் சில பகுதிகளில் ஓரளவு பலத்த மழை

இன்றையதினம் (12) நாட்டின் மத்திய, ஊவா, கிழக்கு, வடமத்திய மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை...

இலங்கை முஸ்லிம்களின் வரலாறு குறித்த 2வது வருடாந்திர கருத்தரங்கு: கொழும்பில்..!

மர்ஹூம் எம்.ஐ எம்.மொஹிடீன் ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தல் நிலையத்தின் ஏற்பாட்டில், இலங்கை...