பாராளுமன்றம் ‘முழு நீள முதியோர் இல்லம்…’ :புத்தளம் மரிக்காரின் கவிதை தொகுப்பு!

Date:

புத்தளம் மரிக்கார் என்ற பெயரில் அறிமுகமாகியுள்ள புத்தளத்தைச் சேர்ந்த கவிஞர் மரிக்கார் இளமைக்காலம் முதல் பல்வேறு தலைப்புக்களின் கீழ் கவிதைகளை எழுதுவதில் மிகவும் பிரபலமானவர்.

அந்தவகையில் மனிதர்களின் வாழ்வியல் முறைகளையும் சமூக பிரச்சினைகளையும் கவிதைகளின் ஊடாக உணர்வு பூர்வமாக எழுதும் அவருடைய பாணி அலாதியானது.

எனவே அவருடைய கவிதைகளில் காணப்படுகின்ற கருத்துக்கள் வாசகர்களை கூடுதலாக சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் அவருடைய கவிதைகளை தொடர்ச்சியாக வழங்கவிருக்கின்றோம்.

பாராளுமன்றம்..!

                                                    மூடர் கூடம்…

முழு நீள
முதியோர் இல்லம்…

வாய்களால் வாழ்வோரின்…
வாசஸ்தலம்…

தாவி விளையாடும்…
தவளைகளின் தடாகம்…

வரிசையில் நிற்காதோர்…
வந்துபோகும் இடம்…

களவும், பொய்யும்…
கொலையும் கற்குமிடம்….

மீசை வைத்த மிருகங்கள் கத்தும்…
Nursary வளாகம்…

நாக்குகளின்
நரகம்…!

ஒட்டுமொத்த கள்வர்கள்..
ஒளிந்திருக்கும் இடம்…

தேசத்தை தின்னும்…
பேய்களின் உணவு மண்டபம்…

ரகசியமாய் ரத்தம் உறிஞ்சும்…
அட்டைகளின் கொட்டில்…..

விலையுயர்ந்த கதிரையில் வீற்றிருக்கும்…
விஷ ஜந்துகளின் மாடம்…

கஞ்சா பயிரிடும்…
நடிகையின் வயல்….

நாட்டையே விற்கும்…
முகவர் நிலையம்…

வாக்குறுதிகள் தூக்கில் தொங்கும்…
வரலாற்று museum…

மக்கள் பிரதிநிதிகள்…
மக்களுக்கெதிராக வாக்களிக்கும்…
தேர்தல் நிலையம்…!

நமக்கு நாமே…

தேர்தல் மேடையில் தெரிவுசெய்த…
ஆப்புகளின் அரங்கம்…!!

###

225…

முகத்தை தவிர…
முழுவதும் ஒன்றுதான்…

தெரிவில் விழிப்போம்…!

அடுத்த Election இலேனும்…
அறிவைப் பிரயோகிப்போம்…!!


புத்தளம் மரிக்கார்
 

Popular

More like this
Related

காஸாவில் போர் நிறுத்தம்: குனூத் அந் நாஸிலாவை நிறுத்திக் கொள்ளுமாறு ஜம்மியத்துல் உலமா வேண்டுகோள்

காஸாவில் போர் நிறுத்தம் தொடர்பாக இதுவரை ஒதப்பட்டு வந்த இன்று முதல்...

இரண்டு ஆண்டுகள் முடக்கத்தில் இருந்த பள்ளிவாசல்: சுத்தம் செய்யத் தொடங்கிய காசா மக்கள்

 யுத்த நிறுத்தத்தை தொடர்ந்து நிலைமைகள் சீராகத் தொடங்கியுள்ள நிலையில் மஸ்ஜித் ஸுஹதா...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை சந்தித்தார் ஞானசார தேரர்

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட...

நாட்டில் எலிக்காய்ச்சல் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ள 12 மாவட்டங்கள் அடையாளம்

நாட்டில் எலிக்காய்ச்சல் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ள 12 மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக,...