‘புதிய வரிகளை நீக்கினால் சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகள் கிடைக்காது’

Date:

விதிக்கப்பட்டுள்ள புதிய வரிகளை நீக்கினால் சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கையில் கைச்சாத்திட முடியாது என அமைச்சரவைப் பேச்சாளர், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (24) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பந்துல குணவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மாதாந்தம் 45,000 ரூபாவுக்கு மேல் வருமானம் ஈட்டுபவர்களுக்கு வரி அறவிடப்படும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளதாகவும், நீண்ட கலந்துரையாடலின் பின்னர் 1 இலட்சம் ரூபா வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாட்டுக்கு வர முடியாவிட்டால் இரண்டு வாரங்களுக்கு மேல் நாட்டை நடத்த முடியாது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

கொழும்பு மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்

கொழும்பு மாநகர சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின்...

ஜெட்டாவுக்கான கொன்சல் ஜெனரலாக முஸ்லிம் அல்லாத ஒருவரின் நியமனம் தற்காலிகமானதே: பிரதி அமைச்சர் முனீர் முலப்பர் விளக்கம்!

வரலாற்றில் முதல் முறையாக, முஸ்லிம் அல்லாத ஒருவரை சவூதி அரேபியாவின் ஜெட்டா...

பாடப்புத்தகத்தில் பொருத்தமற்ற வாசகம் தொடர்பான விசாரணையை ஆரம்பித்த கல்வி அமைச்சு!

தரம் 6 இல் ஆங்கிலப் பாடத் தொகுதியில் இடம்பெற்றுள்ள பொருத்தமற்ற வாசகம்...

மத சுதந்திரத்தை மதித்த இந்து பெற்றோர்: மகனை உம்ராவுக்கு வழியனுப்பி வைத்த நெகிழ்ச்சி சம்பவம்

தமிழ்நாட்டில் இருந்து சமூக வலைதளங்களில் பெரும் கவனத்தை ஈர்த்த, மனதை நெகிழவைக்கும்...