புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள்கள் பரிசீலனை இறுதி கட்டத்தில்..!

Date:

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி 99 வீதம் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்த விடைத்தாள்களில் ஏதேனும் பிரச்னைகள் உள்ளதா என பல கட்டங்களின் கீழ் சோதனை நடத்தப்பட்டு வருவதாக  பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.

பணி முடிந்ததும் தேர்வு முடிவுகள் கணினிமயமாக்கும் பணி தொடங்கும். புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் பல பிரச்சினைகள் பதிவாகிய சம்பவங்கள் தொடர்பான விசாரணைகள் தற்போது நிறைவடைந்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

அநீதி இழைக்கப்பட்ட மாணவர்கள் யாரேனும் இருந்தால், தேர்வு முடிவுகள் வெளியாவதற்குள் அவர்களுக்கு நீதி வழங்கப்படும். 5ம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இம்மாதத்திற்குள் வெளியிடப்படும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

2022 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை கடந்த டிசம்பர் 18 ஆம் திகதி நடைபெற்றது. நாடளாவிய ரீதியில் 2,894 நிலையங்களில் நடைபெற்ற பரீட்சைக்கு மூன்று இலட்சத்து முப்பத்து நாலாயிரத்து அறுநூற்று தொண்ணூற்று எட்டு மாணவர்கள் தோற்றியதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

Popular

More like this
Related

சுரேஷ் சாலே மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத் தாக்கல்

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ்...

பாதுகாப்பு மற்றும் தற்காப்பு ஒத்துழைப்பு: சிரியா சென்றடைந்தார் உக்ரைன் ஜனாதிபதி.

உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஷெலென்ஸ்கி மற்றும் துருக்கி வெளியுறவு அமைச்சர் ஹக்கன் ஃபிடான்...

புத்தாண்டு காலத்தில் இணையவழி மோசடி: பொலிஸார் எச்சரிக்கை

இணையவழி பணப்பரிமாற்றங்களின் போது பொதுமக்களை ஏமாற்றி முன்னெடுக்கப்படும் நிதி மோசடி குறித்து...

மத்திய கிழக்கு மோதல்: ஐநா உடனடியாகத் தலையிடக் கோரி கொழும்பில் ஐநா அலுவலகத்தில்’தர்மசக்தி அமைப்பு’ மகஜர் கையளிப்பு.

இலங்கையில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக மத நல்லிணக்கத்திற்காகப் பணியாற்றி வரும் பௌத்த,...