மின்சாரம் தாக்கி இராணுவ வீரர் உயிரிழப்பு!

Date:

கொழும்பு, மட்டக்குளி பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை மின்சாரம் தாக்கி இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

மட்டக்குளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காக்கைதீவு பிரதேசத்தில் உள்ள இராணுவ முகாமில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது மின்கம்பியை இழுக்க முயன்ற போது இவ்வாறு மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் 38 வயதுடைய ஹேகித்த, வத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவராவார்.

மட்டக்குளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Popular

More like this
Related

ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் இலங்கை வருகை!

இலங்கை அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்பை ஏற்று, ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர்...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வரண்ட வானிலை நிலவும்

இன்றையதினம் (26) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும்...

காசாவில் நெஞ்சை உலுக்கும் கொடூரம்: தந்தையை மிரட்ட குழந்தையை சித்திரவதை செய்த இஸ்ரேலியப் படை!

காசா முனையில் நிலவும் போர்ச் சூழலில், மனிதநேயமற்ற முறையில் ஒரு வயதுக்...

சுயதொழில் உபகரணங்கள் மற்றும் கல்வி நிதியுதவி வழங்கி வைப்பு: பஹன மீடியாவின் மற்றுமோர் மனிதாபிமானப் பணி

இலங்கையில் ஊடகப்பணியைத் தாண்டி, சமூக மேம்பாட்டுப் பணிகளிலும் பஹன மீடியா நிறுவனம்...