இராஜினாமா செய்வதற்கு முன் முஜிபுருக்கு, ஜனாதிபதி கூறிய செய்தி?

Date:

ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானை தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்டாம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கேட்டுக்கொண்டுள்ளார்.

இன்று பாராளுமன்றில் உரையாற்றிய ஜனாதிபதி,

பாராளுமன்ற உறுப்பினர் முஜுபர் ரஹ்மானை பாராளுமன்றத்திற்கு அழைத்து வந்தது தாம் தான் எனவும், அதன் காரணமாக தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ய வேண்டாம் எனவும் ஜனாதிபதி அறிவுறுத்தினார்.

மார்ச் 9 ஆம் திகதி தேர்தல் நடைபெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்த போதிலும், அந்த திகதி உத்தியோகபூர்வமாக தீர்மானிக்கப்படவில்லை.

முஜிபுர் ரஹ்மானை நானே நாடாளுமன்றத்துக்கு அழைத்து வந்தேன். தற்போது அவர் பலிக்கடா ஆக்கப்படப் போவது எனக்கு தெரியும். அவரை நாடாளுமன்றத்தில் வைத்திருக்க முயற்சித்தேன், இனிமேல் அது பற்றி பேசப்போவதில்லை என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்காக முஜுபர் ரஹ்மான் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.

Popular

More like this
Related

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...

ஈரான் மாலுமிகள் தொடர்பில் இலங்கை சர்வதேச சட்டங்களைப் பின்பற்றும்!

இலங்கையின் பொறுப்பிலுள்ள ஈரான் மாலுமிகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட...

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...