இராஜினாமா செய்வதற்கு முன் முஜிபுருக்கு, ஜனாதிபதி கூறிய செய்தி?

Date:

ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானை தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்டாம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கேட்டுக்கொண்டுள்ளார்.

இன்று பாராளுமன்றில் உரையாற்றிய ஜனாதிபதி,

பாராளுமன்ற உறுப்பினர் முஜுபர் ரஹ்மானை பாராளுமன்றத்திற்கு அழைத்து வந்தது தாம் தான் எனவும், அதன் காரணமாக தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ய வேண்டாம் எனவும் ஜனாதிபதி அறிவுறுத்தினார்.

மார்ச் 9 ஆம் திகதி தேர்தல் நடைபெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்த போதிலும், அந்த திகதி உத்தியோகபூர்வமாக தீர்மானிக்கப்படவில்லை.

முஜிபுர் ரஹ்மானை நானே நாடாளுமன்றத்துக்கு அழைத்து வந்தேன். தற்போது அவர் பலிக்கடா ஆக்கப்படப் போவது எனக்கு தெரியும். அவரை நாடாளுமன்றத்தில் வைத்திருக்க முயற்சித்தேன், இனிமேல் அது பற்றி பேசப்போவதில்லை என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்காக முஜுபர் ரஹ்மான் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.

Popular

More like this
Related

இலங்கையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அவசர நிவாரண திட்டத்தை ஆரம்பித்து வைக்கிறது கத்தார் செரிட்டி.

அபிவிருத்திக்கான கத்தார் நிதியத்தின் நிதிப் பங்களிப்புடன் இலங்கைக்கான கத்தார் அரசின் தூதரகத்துடன்...

Re building Sri lanka திட்டத்திற்கு இதுவரை ரூ. 1893 மில்லியன் நிதி உதவி

டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவிலிருந்து நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள Re...

35 தொன் மனிதாபிமான உதவிப் பொருட்களை இலங்கைக்கு அனுப்பியுள்ள ரஷ்யா!

ரஷ்யா மனிதாபிமான உதவிப் பொருட்களை விமானம் மூலம் இலங்கைக்கு அனுப்பியுள்ளதாக, மொஸ்கோவிற்கான...

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு பல தனியார் நிறுவனங்களிடமிருந்து நன்கொடைகள்

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் ‘Rebuilding Sri...