இலங்கைக்கு அவசரமாக நிதியுதவி தேவைப்படுகிறது: அமெரிக்கா

Date:

இந்த தருணத்தில் இலங்கைக்கு மிக அவசரமான நிதி நிவாரணம் தேவைப்படுவதாக அமெரிக்க திறைசேரி செயலாளர் ஜேனட் எல். யெலன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் நடைபெற்ற ஜி-20 நாடுகளின் நிதியமைச்சர்கள் மற்றும் பிற அதிகாரிகள் பங்கேற்ற மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கடன் சுமையால் உலகின் பல நாடுகள் பின்தங்குவதைத் தடுக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் தரவுகளின்படி, குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் சுமார் 55 சதவீத நாடுகள் கடன் ஆபத்தில் உள்ளன என்று அமெரிக்க திறைசேரி செயலாளர் தெரிவித்துள்ளார்.

வளரும் நாடுகள் மற்றும் கடன் நெருக்கடியில் உள்ள நாடுகளுக்கு மிகவும் பயனுள்ள கடன் நிவாரணம் வழங்க சீனா உட்பட அனைத்து இருதரப்பு உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்களுக்கும் தொடர்ந்து அழுத்தம் கொடுப்பதாக அமெரிக்க திறைசேரி செயலாளர் ஜேனட் எல். யெலன் கூறினார்.

மேலும்  இலங்கை மற்றும் சாம்பியாவிற்கு மிக அவசரமான கடன் நிவாரணம் தேவை.இலங்கைக்கான குறிப்பிட்ட மற்றும் நம்பகமான நிதிச் சான்றிதழ்களை வழங்குவது இன்றியமையாதது எனவும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...