இலங்கைக்கு ஆதரவை வெளிப்படுத்தும் பாகிஸ்தான் வெளிவிவகார இராஜாங்க அமைச்சரின் விஜயம்!

Date:

பாகிஸ்தானின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் ஹினா ரப்பானி கர் இன்று (03) முதல் இரண்டு நாள் விஜயமாக இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

பாகிஸ்தானின் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மும்தாஸ் சஹ்ரா பலோச் கூறுகையில், இலங்கையின் 75 வது சுதந்திர தின விழாவில் கெளரவ விருந்தினராக அமைச்சர் பங்கேற்பார்.

சுதந்திர தின நிகழ்வுகளில் கலந்துகொள்வதுடன், ஹினா ரப்பானி கர் இலங்கைத் தலைமைக்கு அழைப்பு விடுக்கவுள்ளதாகவும், இலங்கையின் வெளிவிவகார அமைச்சருடன் சந்திப்பொன்றை நடத்தவுள்ளதாகவும் மும்தாஸ் சஹ்ரா பலோச் தெரிவித்துள்ளார்.

இருதரப்பு ஒத்துழைப்பின் அனைத்து அம்சங்களிலும் சீராக வளர்ந்து வரும் வரலாற்று உறவுகளை பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் உள்ளதாக பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

இராஜாங்க அமைச்சரின் விஜயமானது இரு நாடுகளுக்குமிடையிலான புரிந்துணர்வை மேம்படுத்துவதற்கும் இக்கட்டான நேரத்தில் இலங்கைக்கு பாகிஸ்தானின் ஆதரவை வெளிப்படுத்துவதற்கும் பங்களிக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

எகிப்தில் காசா போர் நிறுத்த மாநாட்டுக்கு செல்லும் வழியில் 3 கத்தார் தூதர்கள் விபத்தில் சிக்கி பலி

எகிப்தின் கடற்கரை நகரமான சர்ம் எல்-ஷேக்கிற்கு அருகில் நடந்த கார் விபத்தில்...

சீனாவின் பெய்ஜிங் நகரை சென்றடைந்தார் பிரதமர் ஹரிணி!

2025ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகத் தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக...

இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் 695.7 மில்லியன் டொலர் வரவு!

இந்த ஆண்டு செப்டம்பரில் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நாட்டிற்கு மொத்தம் 695.7...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப.1.00 மணிக்கு பின் மழை

இன்றையதினம் (13) நாட்டின் மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மாகாணங்களிலும் மன்னார்...