எரிவாயு விலை அதிகரிப்பால் ஹோட்டல் உணவுகள் அதிகரிக்குமா? தீர்மானம் இன்று

Date:

லிட்ரோ எரிவாயுவின் விலை அதிகரித்த நிலையில் லாஃப் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்படுமா இல்லையா என்பது இன்று அறிவிக்கப்பட உள்ளது.

இது தொடர்பில் தமது நிறுவனத்தின் பணிப்பாளர் சபை இன்று கூடி தீர்மானம் எடுக்கவுள்ளதாக லாஃப் கேஸ் நிறுவனத்தின் தலைவர் டபிள்யூ.கே.எச் வாகபிட்டிய தெரிவித்துள்ளார்.

அதேநேரம் எரிவாயு விலை அதிகரிப்புடன் ஒப்பிடும் போது உணவு மற்றும் பானங்களின் விலை அதிகரிப்பு தொடர்பில் இன்று தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

எரிவாயு விலை அதிகரிப்பால் பேக்கரி தொழில்துறை கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாகவும் பேக்கரி உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை நேற்று நள்ளிரவு முதல் 12 கிலோ 5 லீற்றர் எரிவாயு சிலிண்டரின் விலை 334 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 12 கிலோ 5 லீற்றர் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 4,743 ரூபாவாக அதிகரித்துள்ளது.

5 கிலோகிராம் வகை எரிவாயு சிலிண்டரின் விலை 134 ரூபாவால் அதிகரிக்கப்பட்டதுடன் அதே சிலிண்டரின் புதிய விலை 1,904 ரூபாவாகும்.

2 கிலோ 3 தசம வகை எரிவாயு சிலிண்டரின் விலை 61 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அந்த சிலிண்டரின் புதிய விலை 883 ரூபாயாக அதிகரித்துள்ளது.

Popular

More like this
Related

இஷாரா செவ்வந்தி உள்ளிட்டோரை தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க முடிவு

இஷாரா செவ்வந்தி உட்பட நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட ஆறு பேரிடம் மேலும்...

பேருந்துகளில் பயணச் சீட்டு வழங்காவிட்டால் அறிவியுங்கள்: போக்குவரத்து அதிகார சபை

பயணச் சீட்டுக்களை பயணிகளுக்கு வழங்குவது தொடர்பில் நேற்றைய தினத்தில் 217 பேருந்துகள்...

உலக உணவு தினம்: உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் விவசாயத்தை ஊக்குவித்து வரும் சவூதி அரேபியா

எழுத்து : காலித் ஹமூத் அல்கஹ்தானி, இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் ஆண்டுதோரும்...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்கு பின் மழை

இன்றையதினம் (16) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு...