கடன் மறுசீரமைப்பு தொடர்பில் ரணில், சீன ஜனாதிபதியுடன் தொலைபேசி உரையாடல்?

Date:

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் சீன ஜனாதிபதிக்கும் இடையில் தொலைபேசி உரையாடல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடன் மறுசீரமைப்பு மற்றும் இருதரப்பு உறவுகளின் எதிர்காலம் குறித்து ஜி ஜின்பிங் விவாதிக்க உள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சீனா, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் இலங்கைக்கு இருதரப்பு கடன் வழங்குவதில் அதிக அளவில் உள்ளன.

சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF)  2.9 பில்லியன் திட்டத்தை அமுல்படுத்த அவர்களின் உத்தரவாதங்கள் முக்கியமாகும்.

(EXIM) எக்சிம் வங்கியின் ஊடாக இலங்கைக்கு வழங்கப்படும் கடன்களுக்கு இரண்டு வருட கால அவகாசம் வழங்குவதாக சீனா உறுதியளித்துள்ளது.

எவ்வாறாயினும் , இலங்கைக்கு விஜயம் செய்த அமெரிக்காவின் துணை இராஜாங்க செயலாளர் விக்டோரியா நுலாண்ட் இந்தியா சாதகமான உத்தரவாதத்தை வழங்கியதாகவும் ஆனால் சீனா வழங்கியது சர்வதேச நாணய நிதியத்தின் கடன் நிலைத்தன்மையை பூர்த்தி செய்ய போதுமானதாக இல்லை என்றும் கூறினார்.

சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங், அமெரிக்க துணைச் செயலாளரின் கருத்துகள் உண்மையைப் பிரதிபலிக்கவில்லை என்று கூறினார்.

ஒரு நட்பு அண்டை நாடு மற்றும் உண்மையான நண்பன் என்ற வகையில், சீனா இலங்கை எதிர்கொள்ளும் சிரமங்கள் மற்றும் சவால்களை உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும், நாட்டின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கு சீனாவின் திறன்களுக்கு சிறந்த உதவிகளை வழங்குவதாகவும் அவர் கூறினார்.

Popular

More like this
Related

விளையாட்டுத் துறையை மேம்படுத்த ஆசிய ரக்பி சம்மேளனம் இலங்கைக்கு முழு ஒத்துழைப்பு!

துபாய், ஐக்கிய அரபு அமீரகம் – இலங்கையின் ரக்பி விளையாட்டை சர்வதேச...

சிறுவர் துஷ்பிரயோகம்: நாடு முழுவதும் உள்ள மேல் நீதிமன்றங்களில் 4,000-க்கும் அதிகமான வழக்குகள் நிலுவை.

குழந்தை துஷ்பிரயோகம் தொடர்பாக நாடு முழுவதும் உள்ள மேல் நீதிமன்றங்களில் தற்போது...

தபால் கட்டணத் திருத்தம் இன்று முதல் நடைமுறைக்கு!

தபால் கட்டணத் திருத்தம் இன்று (09) முதல் நடைமுறைக்கு வருகிறது. பல்வேறு பிரிவுகளின்...

நாட்டின் சில பகுதிகளில் பி.ப. 2.00 மணிக்கு பின் மழை

இன்றையதினம் (09) நாட்டின் காலி, மாத்தறை, களுத்துறை, இரத்தினபுரி மாவட்டங்களில் சில...