கத்தோலிக்க திருச்சபை சுதந்திர தினத்தை புறக்கணித்தது!

Date:

கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் உள்ளிட்ட கத்தோலிக்க திருச்சபை 75வது சுதந்திர தின விழாவை புறக்கணிக்கவுள்ளது.

பெப்ரவரி 1 ஆம் திகதி நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த  அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ, பெப்ரவரி 4 ஆம் திகதி நடைபெறவுள்ள சுதந்திர தின கொண்டாட்டங்களில் கத்தோலிக்க திருச்சபையை சேர்ந்த எவரும் பங்குபற்ற மாட்டார்கள் என தெரிவித்தார்.

மேலும், சமூக பொருளாதார பிரச்சினைகளை எதிர்கொள்ளும் நாட்டில் சுதந்திர தினத்தை கொண்டாட முடியாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், எதிர்ப்பு தெரிவிக்கும் உரிமை, கருத்து சுதந்திரம் உள்ளிட்ட குடிமக்களின் அடிப்படை உரிமைகளை அரசாங்கம் குறைக்கிறது என்று அவர் குற்றம் சாட்டினார்.

Popular

More like this
Related

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...

சொத்து விபரங்களை வழங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு 2 வார காலக்கெடு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், தனது சொத்து மற்றும் பொறுப்புக்கள்...