கொழும்பில் உள்ள முக்கிய இடங்களுக்குள் போராட்டக்கார்கள் நுழைய தடை!

Date:

வரிச்சலுகைக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கொழும்பில் உள்ள முக்கிய இடங்களுக்கு செல்வதற்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நிதியமைச்சு, ஜனாதிபதி அலுவலகம், ஜனாதிபதி மாளிகை மற்றும் காலி முகத்திடலுக்கு செல்வதற்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

கோட்டை பொலிஸாரினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமையவே கோட்டை நீதவான் நீதிமன்றம் இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.

திட்டமிட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டால், போராட்டக்காரர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே அமைதியின்மை ஏற்படும் என்று கூறி கோட்டை காவல்துறை இந்த உத்தரவை கோரியது.

பொதுமக்களுக்கும் வாகன சாரதிகளுக்கும் அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் வீதிகளை மறித்து ஜனாதிபதி அலுவலகம், ஜனாதிபதி மாளிகை, நிதியமைச்சு மற்றும் காலி முகத்திடல் பகுதிகளுக்குள் நுழைய முடியாதவாறும், பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கக் கூடாதென்றும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு நீதவான் உத்தரவிட்டார்.

Popular

More like this
Related

ஜனவரி 01 முதல் பிரிட்டனுக்கான இலங்கை ஆடை ஏற்றுமதிக்கு வரிச் சலுகை

பிரித்தானியாவின் வளர்ச்சியடைந்து வரும் நாடுகளுக்கான வர்த்தகத் திட்டத்தின் (DCTS) கீழ், இலங்கையின்...

சொஹாரா புஹாரியின் முஸ்லிம் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் பதவி இரத்து!

கொழும்பு மாநகர சபை உறுப்பினரான சொஹாரா புஹாரி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்...

உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் 3 இலட்சத்து 40 ஆயிரம் பேர் உயிரிழப்பு

உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 6 இலட்சம் பெண்கள் கர்ப்பப்பை வாய்...

அனுராதபுரம் மற்றும் குருநாகலில் புதிய வீடமைப்புத் திட்டம் ஆரம்பம்: ஜனாதிபதி பங்கேற்பு!

‘தித்வா’ சூறாவளியினால் முழுமையாக சேதமடைந்த வீட்டிற்கு பதிலாக, ‘Rebuilding Sri Lanka’...