கொழும்பில் உள்ள முக்கிய இடங்களுக்குள் போராட்டக்கார்கள் நுழைய தடை!

Date:

வரிச்சலுகைக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கொழும்பில் உள்ள முக்கிய இடங்களுக்கு செல்வதற்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நிதியமைச்சு, ஜனாதிபதி அலுவலகம், ஜனாதிபதி மாளிகை மற்றும் காலி முகத்திடலுக்கு செல்வதற்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

கோட்டை பொலிஸாரினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமையவே கோட்டை நீதவான் நீதிமன்றம் இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.

திட்டமிட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டால், போராட்டக்காரர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே அமைதியின்மை ஏற்படும் என்று கூறி கோட்டை காவல்துறை இந்த உத்தரவை கோரியது.

பொதுமக்களுக்கும் வாகன சாரதிகளுக்கும் அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் வீதிகளை மறித்து ஜனாதிபதி அலுவலகம், ஜனாதிபதி மாளிகை, நிதியமைச்சு மற்றும் காலி முகத்திடல் பகுதிகளுக்குள் நுழைய முடியாதவாறும், பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கக் கூடாதென்றும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு நீதவான் உத்தரவிட்டார்.

Popular

More like this
Related

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...

ஈரான் மாலுமிகள் தொடர்பில் இலங்கை சர்வதேச சட்டங்களைப் பின்பற்றும்!

இலங்கையின் பொறுப்பிலுள்ள ஈரான் மாலுமிகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட...

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...