இந்தியாவிலிருந்து இலங்கைக்கு 2 மில்லியன் முட்டைகள் இறக்குமதி!

Date:

  இந்தியாவில் இருந்து முட்டைகள் இறக்குமதி செய்யப்படும் என அரச வர்த்தக பல்வேறு சட்டப்பூர்வ கூட்டுத்தாபனத்தின் பொது முகாமையாளர் சமில இத்தமல்கொட தெரிவித்துள்ளார்.
முதல் தொகுதியாக இரண்டு மில்லியன் முட்டைகள் இறக்குமதி செய்யப்படும் என்றும் அது தொடர்பான வழிகாட்டுதல்கள் அரசின் கால்நடைத் துறையால் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை  பேக்கரி தொழிலுக்கு முட்டை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும்  முட்டை ஒன்றின் விலை 48 ரூபாவாக உயர்ந்துள்ளதாகவும் அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜெயவர்தன கூறுகிறார்.

இந்த தட்டுப்பாடு காரணமாகவே அடுத்த வாரத்திற்குள் முட்டை இறக்குமதி செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

நாளொன்றுக்கு 55 இலட்சம் முட்டை தேவைப்படுகின்ற போதிலும் 50 இலட்சம் முட்டைகள் உற்பத்தி செய்யப்படுவதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் சரத் அத்தநாயக்க தெரிவித்தார்.

ஆனால்இ வாரந்தோறும் முட்டை உற்பத்தி அதிகரித்து வருவதாகவும்இ கோழிப்பண்ணைகளில் இருந்து ஒரு முட்டை 42 அல்லது 43 ரூபாய்க்கு பேக்கரி உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டு வருவதாகவும்இ 60 கிராமுக்கு மேல் முட்டை இருந்தால் விலையில் சிறிது மாற்றம் ஏற்படும் என்றும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

சிறந்த நாட்டை உருவாக்குவதற்கான கூட்டு முயற்சிக்கு உழைக்கும் மக்களுக்கு அழைப்பு:: ஜனாதிபதியின் மே தின வாழ்த்து!

உலகளாவிய போர்ச் சூழல்களுக்கு மத்தியிலும், ஒரு நாடாகப் பல பொருளாதார வெற்றிகளை...

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...