கொழும்பில் உள்ள முக்கிய இடங்களுக்குள் போராட்டக்கார்கள் நுழைய தடை!

Date:

வரிச்சலுகைக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கொழும்பில் உள்ள முக்கிய இடங்களுக்கு செல்வதற்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நிதியமைச்சு, ஜனாதிபதி அலுவலகம், ஜனாதிபதி மாளிகை மற்றும் காலி முகத்திடலுக்கு செல்வதற்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

கோட்டை பொலிஸாரினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமையவே கோட்டை நீதவான் நீதிமன்றம் இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.

திட்டமிட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டால், போராட்டக்காரர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே அமைதியின்மை ஏற்படும் என்று கூறி கோட்டை காவல்துறை இந்த உத்தரவை கோரியது.

பொதுமக்களுக்கும் வாகன சாரதிகளுக்கும் அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் வீதிகளை மறித்து ஜனாதிபதி அலுவலகம், ஜனாதிபதி மாளிகை, நிதியமைச்சு மற்றும் காலி முகத்திடல் பகுதிகளுக்குள் நுழைய முடியாதவாறும், பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கக் கூடாதென்றும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு நீதவான் உத்தரவிட்டார்.

Popular

More like this
Related

செப்டம்பர் முதல் 13 நாட்களில் 2,100-க்கும் மேற்பட்ட டெங்கு பாதிப்புகள்

இந்த ஆண்டில் இதுவர 97,637 டெங்கு நோய்த்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தேசிய...

நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை

நாட்டின் பல பகுதிகளில் இன்று காலை முதல் பலத்த மழையுடன் கூடிய...

நாட்டின் சில பகுதிகளில் 50 மி.மீ. இற்கும் அதிக மழை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை...

போதைப்பொருள் கடத்தல்காரர் ஷிரான் பாசிக்கின் தந்தை கைது!

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரும் பாதாள உலகக் குழுத் தலைவனுமான ஷிரான் பாசிக்கின்...