உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஒரு மேடையில் போராட்டம் நடத்தவுள்ளதாக சில இணையத்தளங்கள் செய்தி வெளியிட்டிருந்த நிலையில், அவ்வாறான செய்திகளை ஐக்கிய மக்கள் சக்தி பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார மறுத்துள்ளார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் ஒத்திவைக்கப்படுவதற்கு எதிராகப் போராடுவதற்கு இரு கட்சிகளும் பொதுவான மேடையில் இறங்க முடிவு செய்துள்ளதாக சில செய்தி இணையத்தளங்கள் தெரிவித்துள்ளன.
‘மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவுடன் மத்தும பண்டார தொலைபேசியில் உரையாடியதாகவும், இரு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து பொது பேரணியை நடத்துவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அனுரகுமார திஸாநாயக்கவுடன் நான் ஒருபோதும் உரையாடவில்லை, நாங்கள் எந்த உடன்படிக்கையிலும் ஈடுபடவில்லை” என்று மத்தும பண்டார ஆங்கில செய்தி ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.