சஜித்- அனுரவின் கட்சிகள் இணைந்து ஒரே மேடையில் போராட்டம்?

Date:

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஒரு மேடையில் போராட்டம் நடத்தவுள்ளதாக சில இணையத்தளங்கள் செய்தி வெளியிட்டிருந்த நிலையில், அவ்வாறான செய்திகளை ஐக்கிய மக்கள் சக்தி பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார மறுத்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் ஒத்திவைக்கப்படுவதற்கு எதிராகப் போராடுவதற்கு இரு கட்சிகளும் பொதுவான மேடையில் இறங்க முடிவு செய்துள்ளதாக சில செய்தி இணையத்தளங்கள் தெரிவித்துள்ளன.

‘மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவுடன் மத்தும பண்டார தொலைபேசியில் உரையாடியதாகவும், இரு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து பொது பேரணியை நடத்துவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அனுரகுமார திஸாநாயக்கவுடன் நான் ஒருபோதும் உரையாடவில்லை, நாங்கள் எந்த உடன்படிக்கையிலும் ஈடுபடவில்லை” என்று மத்தும பண்டார ஆங்கில செய்தி ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.

Popular

More like this
Related

குணமடைந்த 22 ஈரானிய மாலுமிகள் கொக்கல முகாமிற்கு!

தாக்குதலுக்குள்ளான ‘IRIS Dena’ கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, கராபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை...

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...