சஜித்- அனுரவின் கட்சிகள் இணைந்து ஒரே மேடையில் போராட்டம்?

Date:

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஒரு மேடையில் போராட்டம் நடத்தவுள்ளதாக சில இணையத்தளங்கள் செய்தி வெளியிட்டிருந்த நிலையில், அவ்வாறான செய்திகளை ஐக்கிய மக்கள் சக்தி பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார மறுத்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் ஒத்திவைக்கப்படுவதற்கு எதிராகப் போராடுவதற்கு இரு கட்சிகளும் பொதுவான மேடையில் இறங்க முடிவு செய்துள்ளதாக சில செய்தி இணையத்தளங்கள் தெரிவித்துள்ளன.

‘மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவுடன் மத்தும பண்டார தொலைபேசியில் உரையாடியதாகவும், இரு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து பொது பேரணியை நடத்துவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அனுரகுமார திஸாநாயக்கவுடன் நான் ஒருபோதும் உரையாடவில்லை, நாங்கள் எந்த உடன்படிக்கையிலும் ஈடுபடவில்லை” என்று மத்தும பண்டார ஆங்கில செய்தி ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...