சமூக ஊடக செயற்பாட்டாளர் தர்ஷன ஹந்துன்கொட பிணையில் விடுதலை!

Date:

சமூக ஊடக செயற்பாட்டாளர் தர்ஷன ஹந்துன்கொட இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

நேற்று இரவு டுபாயில் இருந்து பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த போது,  குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசேட குழுவினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த காலங்களில், யூடியூப் சமூக ஊடகங்கள் மூலம் தற்போதைய அரசாங்கத்தின் காவல்துறை அமைச்சர் திரான் அலஸ் மற்றும் சுற்றுலா இராஜாங்க அமைச்சர் திருமதி டயானா கமகே குறித்து பல சர்ச்சைக்குரிய தகவல்களை வெளியிட்டார்.

கடந்த காலங்களில் இணைய ஊடகங்கள் ஊடாக கருத்துக்களை வெளியிட்ட பலர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

இதேவேளை, பிரபல யூடியூப் சேனலை நடத்தி வந்த செபால் அமரசிங்க பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

 

Popular

More like this
Related

9 A சித்தி பெற்ற மாணவிக்கு 50,000 ரூபாய் பரிசு!

கல்முனை நற்பிட்டிமுனை அல்-அக்ஸா மத்திய மகா வித்தியாலய மாணவி பாத்திமா அனபா,...

இந்திய வெளிவிவகார அமைச்சருடன் பிரதமர் ஹரிணி சந்திப்பு!

இந்தியாவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அந்நாட்டு...

மாஸ்கோவில் புடினுடன் சிரியாவின் இடைக்கால ஜனாதிபதி சந்திப்பு!

ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில், அதிபர் ஜனாதிபதி புதினை, சிரியாவின் இடைக்கால ஜனாதிபதி...

இஷாரா செவ்வந்தி உள்ளிட்டோரை தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க முடிவு

இஷாரா செவ்வந்தி உட்பட நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட ஆறு பேரிடம் மேலும்...