சமூக ஊடக செயற்பாட்டாளர் தர்ஷன ஹந்துன்கொட பிணையில் விடுதலை!

Date:

சமூக ஊடக செயற்பாட்டாளர் தர்ஷன ஹந்துன்கொட இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

நேற்று இரவு டுபாயில் இருந்து பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த போது,  குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசேட குழுவினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த காலங்களில், யூடியூப் சமூக ஊடகங்கள் மூலம் தற்போதைய அரசாங்கத்தின் காவல்துறை அமைச்சர் திரான் அலஸ் மற்றும் சுற்றுலா இராஜாங்க அமைச்சர் திருமதி டயானா கமகே குறித்து பல சர்ச்சைக்குரிய தகவல்களை வெளியிட்டார்.

கடந்த காலங்களில் இணைய ஊடகங்கள் ஊடாக கருத்துக்களை வெளியிட்ட பலர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

இதேவேளை, பிரபல யூடியூப் சேனலை நடத்தி வந்த செபால் அமரசிங்க பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

 

Popular

More like this
Related

பேரிடரால் பாதிக்கப்பட்ட வழிபாட்டுத் தலங்களுக்கு தலா ரூ. 25000!

மோசமான காலநிலை காரணமாக பேரிடருக்கு உள்ளான அனைத்து வழிபாட்டு தலங்களையும் துப்பரவு...

இலங்கையின் மீட்பு முயற்சிகளுக்காக 35 மில்லியன் டொலர்களை திரட்டும் ஐ.நா!

இலங்கையின் மீட்பு முயற்சிகளை ஆதரிப்பதற்காக, அடுத்த நான்கு மாதங்களில் 35 மில்லியன்...

கொழும்பு ரிட்ஜ்வே வைத்தியசாலையில் ‘ஓட்டிசம்’ அலகை மேம்படுத்த ரூ. 398.09 மில்லியன் ஒதுக்கீடு!

கொழும்பு சீமாட்டி றிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையில் முழுமையான வசதிகளுடனான மனவளர்ச்சி குன்றிய...

அமெரிக்க உயர்மட்ட இராஜதந்திரி அலிஸன் ஹூக்கர் இலங்கை வருகை!

அரசியல் விவகாரங்களுக்கான அமெரிக்காவின் துணை வெளிவிவகாரச் செயலாளர் அலிசன் ஹூக்கர், உத்தியோகபூர்வ...