ஜனாதிபதியின் புதிய உத்தரவால் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு தடையா?

Date:

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் புதிய உத்தரவு காரணமாக உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு மற்றுமொரு தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது உள்ளூராட்சி தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தயாராகி வருவதாகவும் அதன் ஆரம்ப வேலைகள் கடன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

கடந்த 31ம் திகதி அரசு நிறுவனங்கள் கடன் அடிப்படையில் பொருட்கள் மற்றும் சேவைகளை வாங்கக் கூடாது என்று ஜனாதிபதி புதிய உத்தரவைப் பிறப்பித்தார்.

அதுமட்டுமின்றி, உரிய உத்தரவை மீறி அது தொடர்பான செலவுகளுக்கு அரசு அதிகாரிகளே தனிப்பட்ட முறையில் பொறுப்பு என்று அவர் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

கடன் அடிப்படையில் எரிபொருள் வழங்குதல், அச்சடிக்கும் பணிகள் மேற்கொள்வது, அரசு ஊழியர்களின் சேவையைப் பெறுவது போன்ற தேர்தல் ஆணைக்குழு செயல்பாடுகளுக்கு மேலும் ஒரு தடையாக இருப்பதே இந்தப் புதிய உத்தரவுக்குக் காரணம்.

இதுவரை நடந்த ஒவ்வொரு தேர்தலிலும், தேர்தல் ஆணைக்குழு  கடன் அடிப்படையில் பொருட்கள் மற்றும் சேவைகளை கொள்முதல் செய்தது.

ஜனாதிபதியின் புதிய உத்தரவு உள்ளுராட்சி தேர்தலை இலக்காகக் கொண்டதாக சிலர் சந்தேகிக்கின்றனர்.

Popular

More like this
Related

சத்தியாகிரக போராட்டத்தை கைவிட்ட விமல்!

புதிய கல்விச் சீர்திருத்தங்களை அடுத்த வருடம் வரை ஒத்திவைப்பதாக அரசாங்கம் அறிவித்ததைத்...

போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதற்கு பின் இஸ்ரேலின் தாக்குதல்களில் சுமார் 100 பலஸ்தீன குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்: ஐ.நா. தகவல்.

காசாவில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டதற்குப் பிந்தைய இஸ்ரேலின் தாக்குதல்களில் சுமார் 100 பலஸ்தீன...

கொழும்பு, கம்பஹா மற்றும் காலி மாவட்டங்களில் விசேட சுகாதாரத் திட்டம்

‘Resolve to Save Lives’ எனும் சர்வதேச நிறுவனத்தின் 242,125 அமெரிக்க...

கதை சார்ந்த விருந்தோம்பலின் புதிய அத்தியாயத்தை இலங்கையில் ஆரம்பிக்கும் TONIK

Acorn குழுமத்தின் வலிமையும், உலகளாவிய அணுகுமுறையும் ஆதரவாக இருப்பதால், TONIK புதுமையான...