தெல்தோட்டையில் ‘ஸ்ரேன்ஜர்ஸ்’ விளையாட்டுக் கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட விளையாட்டு திருவிழா!

Date:

தெல்தோட்டை, மெதகெகில, ஸ்ரேன்ஜர்ஸ் விளையாட்டு கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சிவப்பு, நீலம் மற்றும் பச்சை இல்லங்களுக்கு இடையிலான விளையாட்டு திருவிழா கடந்த சனிக்கிழமை (18) மிக விமர்சையாக நடைபெற்று முடிந்தது.

கடும் போட்டிக்கு மத்தியில் இடம்பெற்ற இந்த விளையாட்டு திருவிழாவின் இறுதியில் ஹாரிஸ்கான் அவர்களின் தலைமையிலான நீல இல்லம் 2023ம் ஆண்டுக்கான வெற்றி இல்லமாக தெரிவானது.

இரு தினங்கள் ஏற்பாடு செய்யப்பட்ட விளையாட்டு திருவிழாவில், முதல் கட்டமாக மரதன், கெரம், மென்பந்து, கரப்பந்து, உதைப்பந்து போன்ற குழு நிகழ்ச்சிகள் ஜனவரி மாதம் 21 திகதி நடைபெற்றன.

விளையாட்டு திருவிழாவின் இரண்டாம் கட்ட நிகழ்ச்சிகள் ஊர் மக்களின் அமோக வரவேற்புடன் கடந்த 18ம் திகதி காலை 08:30 மணிக்கு ஆரம்பமாகியது.

பாலர் பாடசாலை சிறார்களுக்கான 50 மீற்றர் ஒட்டப் பந்தயத்துடன் இனிதே ஆரம்பமாகிய விளையாட்டு திருவிழா 06 வயதின் கீழ், 08 வயதின் கீழ், 10 வயதின் கீழ், 13 வயதின் கீழ், 17 வயதின் கீழ், 20 வயதின் கீழ், 30 வயதின் கீழ், 30 வயதின் மேல் என அனைத்து பிரிவுகளுக்குமான போட்டி நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இரு நாட்களின் முடிவில் மொத்தபுள்ளிகளின் அடிப்படையில் 2023ம் ஆண்டுக்கான வெற்றிபெற்ற இல்லமாக அறிவிப்பாளர் யாகூப் அவர்களினால் ஹாரிஸ்கானினால் வழிப்படுத்தப்பட்ட நீல இல்லம் அறிவிக்கப்பட்டது.

அனைவரினதும் கரகோஷத்துடன் கின்னம் வழங்கும் வைபவத்துடன் விளையாட்டு திருவிழா இனிதே நிறைவுபெற்றது.

இந்நிகழ்வின் பிரதம அதிதியாக கலாநிதி அஷ்ஷெய்க் முனீர் சாதிக் அவர்கள் கலந்துகொண்டார்.

ஸ்ரேன்ஜர்ஸ் விளையாட்டு திருவிழா நிகழ்வினை பவாஸ் ஆசிரியர் தலைமையில் ஸாலிஹ், சிபான், இர்ஸாத், ஸல்மான், ரிபாஸ் மற்றம் நுஸ்ரி ஆகியோரை உள்ளடக்கிய ஏற்பாட்டுக் குழு வெற்றிகரமாக ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

சிறந்த நாட்டை உருவாக்குவதற்கான கூட்டு முயற்சிக்கு உழைக்கும் மக்களுக்கு அழைப்பு:: ஜனாதிபதியின் மே தின வாழ்த்து!

உலகளாவிய போர்ச் சூழல்களுக்கு மத்தியிலும், ஒரு நாடாகப் பல பொருளாதார வெற்றிகளை...

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...