பாடசாலை மாணவர்களுக்கு போதை மாத்திரைகளை விற்பனை செய்த வைத்தியர் கைது!

Date:

பதுளை பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் 44 வயதுடைய வைத்தியர் ஒருவர் பாடசாலை மாணவர்களிடையே போதைப்பொருள் காப்சூல்களை விற்பனை செய்த குற்றச்சாட்டில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த வைத்தியர் பதுளையில் தனது தனியார் மருத்துவமனையில் பாடசாலை மாணவர்களுக்கு மருந்துகளை விற்பனை செய்வதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து, விசேட அதிரடிப்படையினர் சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.

அதன்படி, பதுளை பகுதியில் காரில் பயணித்துகொண்டிருந்த வைத்தியரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்தனர்.

செல்லுபடியாகும் உரிம பத்திரம் இல்லாமல் 145 போதை மருந்து உட்செலுத்தப்பட்ட காப்ஸ்யூல்கள் மருத்துவரிடம் இருப்பதை அதிரடிப்படையினர் கண்டறிந்துள்ளனர்.

குறித்த வைத்தியர் இன்று பெப்ரவரி 15 ஆம் திகதி பதுளை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...