பொரளையில் பெண்ணொருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம்: இராணுவத்தினர் இருவர் கைது!

Date:

பொரளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பேஸ்லைன் மாவத்தை, சஹஸ்புர பிரதேசத்தில் பகுதியில் நேற்று (13) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுக் காயத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சந்தேகநபர் ஒருவரை கைது செய்ய சென்ற போது அருகில் இருந்த குறித்த பெண் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகியதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் சஹஸ்புர பிரதேசத்தை சேர்ந்த 25 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் பொரளை பொலிஸ் நிலையத்தினால் குறித்த இராணுவ வீரர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பொரளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...