மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை!

Date:

நாட்டின் போக்குவரத்துத் துறையில் மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்த அரசாங்கம் அனைத்து முயற்சிகளையும் எடுக்குமென, அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

நாட்டில் இயங்கும் முச்சக்கர வண்டிகள் மற்றும் ஏனைய வாகனங்களை மின்சாரத்தில் இயங்கும் வாகனமாக மாற்றுவது தொடர்பான ஆராய்ச்சி மற்றும் உற்பத்திப் பணிகளை மேற்கொள்ளும் வேகா இனோவேட்டிவ் இன்ஸ்டிட்யூட் நிறுவனத்துக்கு கண்காணிப்பு விஜயத்தில் கலந்துகொண்ட போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

UNDP உதவியின் கீழ் இலங்கையில் 300 முச்சக்கர வண்டிகளை மின்சார வாகனமாக மாற்றும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதற்காக, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு புதிய உள்ளூர் வடிவமைப்பாளர்களுக்கு அவர்களின் வடிவமைப்புகளை வழங்குவதற்கான வாய்ப்பை வழங்கியுள்ளது, எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

முச்சக்கர வண்டிகள் மட்டுமின்றி, மோட்டார் சைக்கிள்கள், கார்கள், படகுகள் உள்ளிட்ட பல வாகனங்களை மின்சார வாகனமாக மாற்றும் தொழில்நுட்பத்தையும் இந்த நிறுவனங்கள் பெற்றுள்ளன.

உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் அதிக தேவையுடைய ஒரு தொழிலாக வளர்ந்து வரும் இலங்கை ரயில்வேயின் பயன்படுத்தப்படாத நிலம் மற்றும் சொத்துக்களை வழங்கவும் தேவையான வசதிகளை வழங்கவும் அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்துள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

சீனாவின் பெய்ஜிங் நகரை சென்றடைந்தார் பிரதமர் ஹரிணி!

2025ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகத் தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக...

இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் 695.7 மில்லியன் டொலர் வரவு!

இந்த ஆண்டு செப்டம்பரில் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நாட்டிற்கு மொத்தம் 695.7...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப.1.00 மணிக்கு பின் மழை

இன்றையதினம் (13) நாட்டின் மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மாகாணங்களிலும் மன்னார்...

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...