இலங்கைக்கு கடனுதவி வழங்குவது குறித்து முதல் வட்டமேசைக் கூட்டம்!

Date:

இலங்கைக்கு கடனுதவி வழங்குவது குறித்த எதிர்வரும் வெள்ளிக்கிழமை இடம்பெறும் முதல் பேச்சுவார்த்தையில் சீனா, இந்தியா, சவூதி அரேபியா மற்றும் ஏழு நாடுகளின் இனைந்த குழுவின் அதிகாரிகள் பங்கேற்பார்கள் என சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.

எத்தியோப்பியா, சாம்பியா, கானா ஆகிய வருமானம் இல்லாத நாடுகளின் அதிகாரிகளும் இலங்கை, ஈக்வடோர் போன்ற நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளின் அதிகாரிகளும் இதில் கலந்துகொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியம் தலைமையில், உலக வங்கி மற்றும் ஜி20 குழுவின் தற்போதைய தலைமையான இந்தியா ஆகியோரால் இணைந்து நடத்தப்படும் இந்த பேச்சுவார்த்தை 25 ஆம் திகதி இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுவதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இருப்பினும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் வட்டமேசை கூட்டம் நடைபெறும் என தெரிவித்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர், மேலதிக விவரங்கள் எதிர்காலத்தில் வெளியிடப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

சிறந்த நாட்டை உருவாக்குவதற்கான கூட்டு முயற்சிக்கு உழைக்கும் மக்களுக்கு அழைப்பு:: ஜனாதிபதியின் மே தின வாழ்த்து!

உலகளாவிய போர்ச் சூழல்களுக்கு மத்தியிலும், ஒரு நாடாகப் பல பொருளாதார வெற்றிகளை...

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...