இலங்கைக்கு 400 மில்.அமெரிக்க டொலர் நிதியுதவியை வழங்கியது IFC!

Date:

உலக வங்கியின் முதலீட்டுப் பிரிவான, சர்வதேச நிதியளிப்பு கூட்டுத்தாபனம் (IFC), 400 மில்லியன் அமெரிக்க டொலரை குறுக்கு நாணய பரிமாற்று வசதியை இலங்கைக்கு வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.

இன்று (27) IFC வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது

அத்தியாவசிய இறக்குமதிகளுக்கு நிதியளிப்பதற்காகவே இந்த நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

இதனூடாக, மருந்து, உணவு மற்றும் உரம் உட்பட 30% இறக்குமதிக்கு நிதியளிக்கும் வசதியை மூன்று தனியார் வங்கிகள் பெறும் என்று சர்வதேச நிதியளிப்பு கூட்டுத்தாபனம் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.

இந்த நிதியுதவி, முதலீட்டாளர் சமூகத்தில் நம்பிக்கையை அதிகரிப்பதுடன், இலங்கைப் பொருளாதாரத்திற்கு ஆதரவாக புதிய மூலதன வரவுகளை ஈர்க்கும் எனவும் தாம் எதிர்பார்ப்பதாக தெற்காசியாவுக்கான நிதியியல் நிறுவகங்கள் குழுமத்தின், சர்வதேச நிதியளிப்பு கூட்டுத்தாபன முகாமையாளர் ஜூன் பார்க் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

பொலித்தீன் பைகளுக்கு கட்டணம்!

பொலித்தீன் பாவனையால் ஏற்படும் சூழல் பாதிப்பைக் குறைப்பதற்கு வேலைத்திட்டமொன்றை வகுக்கக் கோரி,...

ஐ.நா. பொதுச் சபையில் ஜனாதிபதியின் உரைக்கு தேசிய சூறா சபையின் பாராட்டு

2025 செப்டம்பர் 24 அன்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையின்...

மாணவனால் தாக்கப்பட்ட ஆசிரியர் வைத்தியசாலையில் அனுமதி!

மொனராகலையில் உள்ள அரச பாடசாலையொன்றின் மாணவர் ஒருவரால் தாக்கப்பட்டதில் ஆசிரியர் சிறு...

வாகன இறக்குமதிக்காக ஒரு பில்லியன் டொலர் செலவு!

வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் மூலம், 2025 ஜனவரி முதல் ஆகஸ்ட்...