கத்தோலிக்க திருச்சபை சுதந்திர தினத்தை புறக்கணித்தது!

Date:

கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் உள்ளிட்ட கத்தோலிக்க திருச்சபை 75வது சுதந்திர தின விழாவை புறக்கணிக்கவுள்ளது.

பெப்ரவரி 1 ஆம் திகதி நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த  அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ, பெப்ரவரி 4 ஆம் திகதி நடைபெறவுள்ள சுதந்திர தின கொண்டாட்டங்களில் கத்தோலிக்க திருச்சபையை சேர்ந்த எவரும் பங்குபற்ற மாட்டார்கள் என தெரிவித்தார்.

மேலும், சமூக பொருளாதார பிரச்சினைகளை எதிர்கொள்ளும் நாட்டில் சுதந்திர தினத்தை கொண்டாட முடியாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், எதிர்ப்பு தெரிவிக்கும் உரிமை, கருத்து சுதந்திரம் உள்ளிட்ட குடிமக்களின் அடிப்படை உரிமைகளை அரசாங்கம் குறைக்கிறது என்று அவர் குற்றம் சாட்டினார்.

Popular

More like this
Related

விசேட தேவையுடையோருக்கென பிரத்தியேக பஸ் சேவை

வேலைத்திட்டத்தின் கீழ் விசேட தேவையுடைவர்களுக்கான முன்னுரிமை அடிப்படையிலான பஸ் சேவைக்கான பஸ்கள்...

இலங்கையின் சனத்தொகை மாற்றம்: காலநிலை மாற்றம் மற்றும் கொள்கை குறைபாடுகளால் ஏற்படும் சமூக-பொருளாதார நெருக்கடிகள்

இலங்கை ஒரு விரைவான சனத்தொகை மாற்றத்தை எதிர்கொண்டு வருகின்றது. தற்போது நாட்டின்...

இலங்கையின் புதிய இராஜதந்திரிகள் தூதுவர்களின் நியமனங்களுக்கு நாடாளுமன்றம் அனுமதி

வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களின் பிரதானிகளாக நியமிக்கப்படுவதற்காக, அண்மையில் ஜனாதிபதி அநுர...

பிலிப்பைன்சின் நெல் ஆராய்ச்சி நிலையத்திற்கு பிரதமர் விஜயம்

பிலிப்பைன்சின் சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனத்தை பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய...