காத்தான்குடியைச் சேர்ந்த தந்தையும் மகளும் ஆற்றில் விழுந்து மரணம்!

Date:

பொலன்னறுவை தம்பல பிரதேசத்தில் கும்புக்கன் வாவியில் தவறி விழுந்து  தந்தையும் மகளும் நேற்று உயிரிழந்துள்ளனர்.

தந்தையும் மகளும் செல்ஃபி எடுக்கச் சென்ற போது வாவியில் தவறி விழுந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆற்றில் விழுந்த இருவரும் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டு மாயமானார்கள்.

காத்தான்குடியைச் சேர்ந்த ஆங்கில ஆசிரியர் ஷாஜகான் என்பவரும் (வயது 46) மற்றும் அவரது பிள்ளைகள் அடங்களாக 5 பேர் பொலன்னறுவை மாவட்டம் தம்பல கும்புக்கன் ஆற்றை பார்வையிடச் சென்றுள்ளனர்.

பாடசாலை விடுமுறை என்பதால் பிள்ளைகள் சகிதம் கடந்த திங்கட்கிழமை மாலை இவர்கள் காத்தான்குடியில் இருந்து பொலன்னறுவை மாவட்டத்துக்கு சென்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இவர்கள்  ஆற்றை பார்வையிடச் சென்று,  ஆற்றின் அருகில் நின்று செல்பி எடுக்க முற்பட்ட போது  ஆசிரியரின் மகள் சயான் பரிசாத் (12 வயது)  ஆற்றினுள் விழுந்துள்ளார்.

தனது மகளை காப்பாற்ற தந்தை ஆற்றினுள் இறங்க ஆறு ஆழமாக இருப்பதனால் இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர்.

இதையடுத்து ஆசிரியரின் மனைவி மற்றும் ஏனைய பிள்ளைகளும் கூக்குரலிட்டு அழ பொது மக்கள் ஒன்று திரண்டு நீரில் மூழ்கியவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

பின்னர் தந்தை ஷாஜகானின் சடலம் முதலிலும், ஒரு மணி நேரத்திற்கு பின்பு மகளின் சடலமும் மீட்கப்பட்டன.

தற்போது இருவரின் சடலங்களும் பொலன்னறுவை வைத்தியசாலையில் பிரேதப் பரிசோதனை மேற்கொண்ட பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படும்.

இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Popular

More like this
Related

பெப்ரவரி மாதத்திற்கான ‘அஸ்வெசும’ முதியோர் கொடுப்பனவு வங்கிக் கணக்குகளில்!

பெப்ரவரி மாதத்திற்கான ‘அஸ்வெசும’ முதலாம் மற்றும் இரண்டாம் கட்டங்களின் கீழான முதியோர்...

பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்; ‘தார்மீக கோழைத்தனம்’ என காங்கிரஸ் விமர்சனம்

இஸ்ரேலுக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் நரேந்திர மோடியின் நடவடிக்கையை இந்தியாவின் எதிர்க்கட்சிகள்...

சாதாரண தரப் பரீட்சை இன்றுடன் நிறைவு: பரீட்சைக்குப் பின் மோதல்களைத் தவிர்க்க நடவடிக்கை

கடந்த 17ஆம் திகதி ஆரம்பித்த O/L பரீட்சை இன்று (26) நிறைவடையவுள்ளது. O/L...

பிரதமர் மோடி, இஸ்ரேல் நாடாளுமன்றத்தின் உயரிய கௌரவமான ‘Speaker of the Knesset Medal’ஐ பெற்றார்.

பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். நேற்று அவர் அந்நாட்டு...