குழந்தைகள் துஷ்பிரயோகம் தொடர்பான வழக்குகள் குறித்து அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்குமாறு தேசிய குழந்தைகள் நல ஆணையம் பொதுமக்களை கேட்டுக்கொள்கிறது.
கொழும்பு உள்ளிட்ட நகர்ப்புறங்களில் இவ்வாறான நிலைமைகள் பதிவாகி வருவதாக அதிகார சபையின் தலைவரான சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.
போதைக்கு அடிமையானவர்கள் பெரும்பாலும் குழந்தைகளை பிச்சை எடுக்கவே பயன்படுத்தப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
சிறுவர்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் கடந்த வருடம் சுமார் எட்டாயிரம் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிறுவர்களை அடித்தல், துன்புறுத்துதல், குழந்தைகளின் புகைப்படங்களை சமூக ஊடங்களின் பகிர்தல், துஷ்பிரயோகத்திற்குட்படுத்துதல் போன்ற பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுவதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.