கொழும்பில் உள்ள முக்கிய இடங்களுக்குள் போராட்டக்கார்கள் நுழைய தடை!

Date:

வரிச்சலுகைக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கொழும்பில் உள்ள முக்கிய இடங்களுக்கு செல்வதற்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நிதியமைச்சு, ஜனாதிபதி அலுவலகம், ஜனாதிபதி மாளிகை மற்றும் காலி முகத்திடலுக்கு செல்வதற்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

கோட்டை பொலிஸாரினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமையவே கோட்டை நீதவான் நீதிமன்றம் இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.

திட்டமிட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டால், போராட்டக்காரர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே அமைதியின்மை ஏற்படும் என்று கூறி கோட்டை காவல்துறை இந்த உத்தரவை கோரியது.

பொதுமக்களுக்கும் வாகன சாரதிகளுக்கும் அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் வீதிகளை மறித்து ஜனாதிபதி அலுவலகம், ஜனாதிபதி மாளிகை, நிதியமைச்சு மற்றும் காலி முகத்திடல் பகுதிகளுக்குள் நுழைய முடியாதவாறும், பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கக் கூடாதென்றும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு நீதவான் உத்தரவிட்டார்.

Popular

More like this
Related

அபிவிருத்திக்கு பயன்படவுள்ள முன்னாள் அமைச்சர்களின் உத்தியோகபூர்வ இல்லங்கள்.

முன்னாள் அமைச்சர்கள் உத்தியோகபூர்வ இல்லங்களாகப் பயன்படுத்திய பங்களாக்கள் மற்றும் தொடர்புடைய வளாகங்கள்...

விளையாட்டுத் தொகுதிகளுக்கு புதிய முகாமைத்துவ சபை

விளையாட்டு கலாச்சாரமொன்றை உருவாக்கும் நோக்கில் (2025-2027), விளையாட்டு அபிவிருத்தித் திணைக்களத்திற்குச் சொந்தமான...

தற்காலிக சாரதி உரிமம் : கட்டணத்தில் மாற்றம்: அமைச்சரவை அங்கீகாரம்

2022 ஆம் ஆண்டின் 03 ஆம் இலக்க மோட்டார் வாகன (சாரதி...

அனர்த்த நிவாரணப்பணியில் தொடரும் ‘Newsnow’இன் பணிகள்: கரைத்தீவு பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!

நாட்டில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட டிட்வா புயல் தாக்கம்...