சமூக ஊடக செயற்பாட்டாளர் தர்ஷன ஹந்துன்கொட பிணையில் விடுதலை!

Date:

சமூக ஊடக செயற்பாட்டாளர் தர்ஷன ஹந்துன்கொட இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

நேற்று இரவு டுபாயில் இருந்து பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த போது,  குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசேட குழுவினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த காலங்களில், யூடியூப் சமூக ஊடகங்கள் மூலம் தற்போதைய அரசாங்கத்தின் காவல்துறை அமைச்சர் திரான் அலஸ் மற்றும் சுற்றுலா இராஜாங்க அமைச்சர் திருமதி டயானா கமகே குறித்து பல சர்ச்சைக்குரிய தகவல்களை வெளியிட்டார்.

கடந்த காலங்களில் இணைய ஊடகங்கள் ஊடாக கருத்துக்களை வெளியிட்ட பலர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

இதேவேளை, பிரபல யூடியூப் சேனலை நடத்தி வந்த செபால் அமரசிங்க பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

 

Popular

More like this
Related

புதுப்பிக்கப்பட்ட Google Map A மற்றும் B வீதி வரைபடங்கள் !

வீதி அபிவிருத்தி அதிகார சபையுடன் இணைந்து Google Map A மற்றும்...

டிசம்பர் மாதத்தின் முதல் 8 நாட்களில் 50,000 ஐத் தாண்டிய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தத்தின் மத்தியிலும் சுற்றுலாப்...

தரம் 6 மாணவர் சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்ப காலம் நீடிப்பு!

இலங்கையில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமையைக் கருத்தில் கொண்டு, தரம் 6 இல்...

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு குவைத் தலைவர்கள் இரங்கல்.

குவைத் நாட்டின் தலைவர்கள் டிட்வா புயல்தாக்கத்தினால் துயரத்தில் வாடும் இலங்கை மக்களுக்கு...