துருக்கியில் 7 நாள் துக்க தினம் அனுஷ்டிப்பு: துருக்கி தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும் அறிவிப்பு!

Date:

துருக்கியில் நேற்று தொடர்ந்து 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில்,  துருக்கி அரசு 7 நாட்கள் தேசிய துக்க தினம் கடைப்பிடிக்கப்படும் என அறிவித்துள்ளது.

அத்தோடு வரும் 12ம்  திகதி துருக்கி மற்றும் வெளிநாடு பிரதிநிதி அலுவலகங்களில் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மீண்டும் துருக்கியில் 5.5 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பனிப்பொழிவால் மீட்பு பணியில் ஏற்கனவே தொய்வு ஏற்பட்டுள்ள நிலையில், மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

துருக்கில் சிரியாவின் எல்லையை ஒட்டிய பகுதிகளில் நேற்று 7.8 ரிக்டர், 7.5 ரிக்டர், 6.0ரிக்டர் என தொடர்ந்து மூன்று முறை சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கத்தால் இதுவரை 4000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து இருப்பதாகவும், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கட்டிட இடிபாடுகளை அகற்றி உடல்களை் மீட்கப்பட்டு வருகின்றன. இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.

Popular

More like this
Related

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை: தேடப்பட்டு வந்த சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் கைது!

‘கணேமுல்ல சஞ்சீவ’ என்று அழைக்கப்படும் பாதாள உலகக் குழுத் தலைவரான சஞ்சீவ...

நாட்டின் சில பகுதிகளில் 100 மி.மீ. வரையான பலத்த மழை

இன்றையதினம் (14) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்குப் பின்...

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...