தேர்தலை சீர்குலைக்கும் குற்றச்செயல்கள் தொடர்பாக தேர்தல் ஆணைக்குழு கவனம்!

Date:

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு இடையூறு விளைவித்ததாக இதுவரை 20 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் பிரதிநிதிகள், மாவட்ட மற்றும் உதவி தேர்தல் ஆணையாளர்களுக்கு இடையில் நேற்று இடம்பெற்ற சந்திப்பில் இந்த விடயங்கள் தெரியவந்ததாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

இதன்போது சில இடையூறுகளை அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் செய்ததாகவும், மற்றைய இடையூறுகளை கட்சிகளின் பிரதிநிதிகளின் வழிகாட்டுதலின் பேரில் வேறு வேறு குழுக்கள் செய்ததாகவும் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான சம்பவங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் குறிப்பிட்டார்.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...