தேர்தல் செத்துவிட்டது; இறப்புச் சான்றிதழை எழுத வேண்டும் :மஹிந்த தேசப்பிரிய

Date:

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இறந்துவிட்டதாகவும், அதன் இறப்புச் சான்றிதழை எழுதுவதே இப்போது எஞ்சியிருப்பதாகவும் எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

காலி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அதன்படி, இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படும் என அவர் தெரிவித்தார். தேர்தல் ஆணைக்குழுவுக்கு வெளியே உள்ள விவகாரங்களால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது என்றும், இதற்கு யார் பொறுப்பு என்று கூற முடியாது என்றும் அவர் கூறினார்.

மேலும் நிதி அமைச்சு ஒரு அத்தியாவசிய விஷயத்திற்காக நிதி வழங்க மறுக்கிறது. இந்த விவகாரம் ஆணையத்தின் எல்லைக்கு புறம்பானது என்பதால் இது ஒத்திவைக்கப்பட்டது.

ஆணைக்குழு தலைவராக இருந்திருந்தால் தேர்தலை நடத்தியிருப்பீர்களா என்று கேட்டதற்கு, “நான் இருந்திருந்தால் பேட்டிங் செய்யத் தெரியும். ஆனால் இப்போது வெளியில் இருக்கிறேன். எப்படி பேட்டிங் செய்வது என்று என்னால் சொல்ல முடியாது. எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

சிறந்த நாட்டை உருவாக்குவதற்கான கூட்டு முயற்சிக்கு உழைக்கும் மக்களுக்கு அழைப்பு:: ஜனாதிபதியின் மே தின வாழ்த்து!

உலகளாவிய போர்ச் சூழல்களுக்கு மத்தியிலும், ஒரு நாடாகப் பல பொருளாதார வெற்றிகளை...

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...