தேர்தல் செத்துவிட்டது; இறப்புச் சான்றிதழை எழுத வேண்டும் :மஹிந்த தேசப்பிரிய

Date:

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இறந்துவிட்டதாகவும், அதன் இறப்புச் சான்றிதழை எழுதுவதே இப்போது எஞ்சியிருப்பதாகவும் எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

காலி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அதன்படி, இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படும் என அவர் தெரிவித்தார். தேர்தல் ஆணைக்குழுவுக்கு வெளியே உள்ள விவகாரங்களால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது என்றும், இதற்கு யார் பொறுப்பு என்று கூற முடியாது என்றும் அவர் கூறினார்.

மேலும் நிதி அமைச்சு ஒரு அத்தியாவசிய விஷயத்திற்காக நிதி வழங்க மறுக்கிறது. இந்த விவகாரம் ஆணையத்தின் எல்லைக்கு புறம்பானது என்பதால் இது ஒத்திவைக்கப்பட்டது.

ஆணைக்குழு தலைவராக இருந்திருந்தால் தேர்தலை நடத்தியிருப்பீர்களா என்று கேட்டதற்கு, “நான் இருந்திருந்தால் பேட்டிங் செய்யத் தெரியும். ஆனால் இப்போது வெளியில் இருக்கிறேன். எப்படி பேட்டிங் செய்வது என்று என்னால் சொல்ல முடியாது. எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...